sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வீரசோழன் சார் பதிவாளர் காரில் கைப்பற்றப்பட்ட பணம்; லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

/

 வீரசோழன் சார் பதிவாளர் காரில் கைப்பற்றப்பட்ட பணம்; லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

 வீரசோழன் சார் பதிவாளர் காரில் கைப்பற்றப்பட்ட பணம்; லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

 வீரசோழன் சார் பதிவாளர் காரில் கைப்பற்றப்பட்ட பணம்; லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை


ADDED : டிச 02, 2025 04:43 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வீரசோழன் சார்பதிவாளர் அசோக்குமார் 44, காரில் இருந்து கணக்கில் வராத ரூ. 3 லட்சத்து 24 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் நவ., 27ல் கைப்பற்றினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

நரிக்குடி வீரசோழன் பத்திரப்பதிவு சார்பதிவாளர் அசோக்குமார் (பொறுப்பு) 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். அதிக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட துணை ஆய்வு குழு அலுவலர் முத்துமாரி, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் கண்காணித்து வந்தனர். நவ., 27ல் மாலை காரில் வீடு திரும்பிய போது, நரிக்குடியில் வழி மறித்து சோதனை செய்த போது பையில் ரூ. 3 லட்சத்து 24 ஆயிரம் கணக்கில் வராத பணம் இருந்ததை கைப்பற்றினர்.

விசாரணையில் பத்திரப்பதிவுக்காக பல்வேறு நபர்களிடம் லஞ்சமாக பெற்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆய்வு குழு அலுவலர் முத்துமாரி புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் மும்தாஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.






      Dinamalar
      Follow us