தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கருவேலம் ஆக்கிரமிப்பு, கழிவு நீரால் பாழ்: காரியாபட்டி எஸ்.தோப்பூர் விவசாயிகள் வேதனை

கருவேலம் ஆக்கிரமிப்பு, கழிவு நீரால் பாழ்: காரியாபட்டி எஸ்.தோப்பூர் விவசாயிகள் வேதனை

கருவேலம் ஆக்கிரமிப்பு, கழிவு நீரால் பாழ்: காரியாபட்டி எஸ்.தோப்பூர் விவசாயிகள் வேதனை


UPDATED : ஜூலை 01, 2026 08:49 PM

ADDED : ஜூலை 01, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 08:49 PM ADDED : ஜூலை 01, 2026 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி: ஒரு புறம் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கண்மாய் இருக்கும் இடமே தெரியாமல் பாழாகி வருகிறது. மறுபுறம் காரியாபட்டி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வரத்து ஓடை வழியாக கண்மாயில் கலந்து விளைநிலங்களில் பாய்ந்து மண்வளம் கெட்டு பாழாகியதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

காரியாபட்டி எஸ்.தோப்பூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் 452 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

4 மடைகள் உள்ளன . 3 கி. மீ., சுற்றளவில் கண்மாய் விரிந்து உள்ளது. 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது.

குண்டாற்றிலிருந்து வரும் நீர் தெற்காறு வழியாக பிரிந்து, வரத்து கால்வாய் வழியாக நீர் ஆதாரம் கிடைத்தது. ஒரு முறை நிரம்பினால் இருப்போகம் விவசாயம் செய்தனர். நாளடைவில் நீர்வரத்து இல்லாததால் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து வறண்டன. போதிய நீர் ஆதாரம் இல்லாததால் விளை நிலங்கள் தரிசாக போடப்பட்டன.

தற்போது எங்கு பார்த்தாலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கண்மாய், வயல்கள் இருக்கும் இடமே தெரியாமல் உள்ளன. கண்மாய் நிரம்பி 15 ஆண்டுகள் ஆகின. காரியாபட்டியில் இருந்து வரும் கழிவு நீர் கலந்ததால் மண்வளம் கெட்டு கண்மாய், வயல்கள் பாழாகின. போதிய நீர் வரத்து இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு தரிசுகளாக கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

10 ஆண்டுக்கு முன் துார்வாரப்பட்டது பெரியசாமி, விவசாயி: இப்பகுதியில் உள்ள பெரிய கண்மாய்களில் இதுவும் ஒன்று. ஒரு முறை நிரம்பினால் போதும், இரு முறை விவசாயம் நடைபெறும். நீர் வரத்து குறைந்ததால் கண்மாய் வறண்டு, வயல்களும் தரிசாகின. தற்போது எங்கு பார்த்தாலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு பாழாகி கிடக்கின்றன. துார்வாரி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.



கழிவு நீரால் விவசாயம் பாழ் வீரராஜ், விவசாயி: காரியாபட்டியில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வரத்து ஓடை வழியாக கலந்ததால் வயல்களில் பாய்ந்து மண்வளம் கெட்டு விவசாயம் செய்ய முடியாமல் போனது. கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். மாற்று வழி நீர் வரத்திற்கு தேவையான ஆதாரங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.



குடிநீர் பாதிப்பு: வெள்ளைச்சாமி, விவசாயி: கண்மாய் நிரம்பியதால்தான் இப்பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது. பல ஆண்டுகளாக வறண்டு கிடப்பதால் நீர் மட்டம் குறைந்து, உப்பு நீராக சுவைமாரியதால் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, நீர் வரத்திற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us