sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 இசலியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி *விபத்திற்கு முன் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி

/

 இசலியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி *விபத்திற்கு முன் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி

 இசலியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி *விபத்திற்கு முன் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி

 இசலியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி *விபத்திற்கு முன் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி


ADDED : டிச 07, 2025 08:36 AM

Google News

ADDED : டிச 07, 2025 08:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி: இசலியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி உள்ளதால், விபத்திற்கு முன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

நரிக்குடி இசலியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய உள்ளூரில் ஆள்துளை கிணறு அமைத்து, 15 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டி அதில் ஏற்றி சப்ளை செய்து வருகின்றனர்.

நாளடைவில் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு நீர் கசிந்து வருகிறது. தூண்கள் சேதமடைந்து கம்பிகள் தெரிகின்றன.

தற்போது வரை மேல்நிலைத் தொட்டி செயல்பாட்டில் இருந்து வருகிறது.

முழு அளவில் நீர் ஏற்றும் போது எடை தாங்காமல் பில்லர் உடைந்து, தொட்டி இடிந்து விழும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது.

அப்பகுதியில் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். குமிழாங்குளம் செல்லும் ரோட்டோரத்தில் உள்ளதால் அவ் வழியாக செல்வோர் தயக்கமுடன் சென்று வருகின்றனர்.

விபத்திற்கு முன் மேல்நிலைத் தொட்டியை அப்புறப்படுத்தி, புதிய தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us