sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 போலி தங்க காசு கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி

/

 போலி தங்க காசு கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி

 போலி தங்க காசு கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி

 போலி தங்க காசு கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி


ADDED : டிச 09, 2025 03:51 AM

Google News

ADDED : டிச 09, 2025 03:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே போலி தங்க காசுகளை கொடுத்து ரூ. 5 லட்சம் மோசடி செய்த தம்பதி உட்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுாரைச் சேர்ந்தவர் ராமர். இவர் நவம்பரில் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுாரில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது அங்குள்ள சிலர் தங்களிடம் தங்க காசுகள் உள்ளதாகவும் குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறினர். ஒரு தங்க காசை வாங்கி ராமர் சோதனையிட்டதில் உண்மையான தங்கம் என தெரிந்தது. இதனால் குறைந்த விலைக்கு ஆசைப்பட்டு ரூ. 5 லட்சம் முன்பணம் கொடுத்து சில தங்க காசுகளை ராமர் வாங்கி சென்றார். பின்னர் அவற்றை பரிசோதித்த பின் போலி என தெரிந்தது.

ராமர் அளித்த புகாரின்பேரில் இதில் தொடர்புடைய காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த சக்திவேலு 67, விழுப்புரம் மாவட்டம் திருக்கையைச் சேர்ந்த பாண்டுரங்கன் 60, அவரது மனைவி அரசாயி 56, சண்முகம் 61, ஆகியோரை ராஜபாளையம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி தங்க காசுகள் மற்றும் ரூ. 2 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us