ADDED : ஜூலை 03, 2026 06:51 AM

அ நிறம் | அளவு
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த சுப்பிரமணியனின், 'குருலட்சுமிபட்டாசு ஆலை' கோப்பைநாயக்கன்பட்டியில் உள்ளது. நேற்று, 61 அறைகளில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை, 4:00 மணியளவில் எதிர்பாராத விதமாக, ஏற்பட்ட வெடி விபத்தில், இரண்டு அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
சிவகாசி, சிலோன் காலனியை சேர்ந்த ராஜம்மாள் என்பவர், காயமடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
மாலை, 4:00 மணியளவில் தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் டீ குடிக்க திறந்த வெளியில் நின்றிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
