sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரியங்காவை செயல் தலைவராக்க தமிழக காங்., நிர்வாகிகள் கடிதம்

/

பிரியங்காவை செயல் தலைவராக்க தமிழக காங்., நிர்வாகிகள் கடிதம்

பிரியங்காவை செயல் தலைவராக்க தமிழக காங்., நிர்வாகிகள் கடிதம்

பிரியங்காவை செயல் தலைவராக்க தமிழக காங்., நிர்வாகிகள் கடிதம்


ADDED : ஜூலை 26, 2024 09:16 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 09:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஹராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட சில மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க, காங்கிரசின் இடைக்கால தலைவர் அல்லது செயல் தலைவராக பிரியங்காவை நியமிக்குமாறு, மேலிடத்திற்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

லோக்சபா தேர்தலுக்கு முன், காங்கிரஸ் தலைவர் கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, வட மாநிலங்களை சேர்ந்த காங்கிரசார் விரும்பவில்லை.

தற்போது, காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், வயது முதிர்வு காரணமாக கார்கேவால் திறம்பட செயல்பட முடியாது. அதனால் கட்சியின் இடைக்கால தலைவர் அல்லது செயல் தலைவராக பிரியங்காவை நியமிக்க வேண்டும்.

இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள மஹாராஷ்டிரா, ஹரியானா போன்ற சில மாநிலங்களின் சட்டசபை தேர்தலை, கார்கே தலைமையில் சந்தித்தால், அம்மாநிலத்தில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, இடைக்கால தலைவர் அல்லது செயல் தலைவராக பிரியங்காவை நியமித்து தேர்தலை சந்தித்தால், அம்மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

ராகுல் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதால், வட மாநிலங்களில் அவரது தலைமையிலும், தென் மாநிலங்களில் பிரியங்கா தலைமையிலும் கட்சியை வழிநடத்த முடியும் என, தமிழக காங்கிரசை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர், சோனியா, ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us