sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நெல்லை, கோவை மேயர் பதவி தேர்தல் நடத்த உத்தரவு

/

நெல்லை, கோவை மேயர் பதவி தேர்தல் நடத்த உத்தரவு

நெல்லை, கோவை மேயர் பதவி தேர்தல் நடத்த உத்தரவு

நெல்லை, கோவை மேயர் பதவி தேர்தல் நடத்த உத்தரவு


ADDED : ஜூலை 26, 2024 01:02 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:காலியாகவுள்ள திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர் பதவிகளை நிரப்ப, மறைமுக தேர்தல் நடத்த, மாநில தேர்தல் கமிஷனர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு, 2022 பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட்டது.

மக்கள் ஓட்டளித்து வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், மறைமுக தேர்தல் வாயிலாக, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்தனர்.

அவ்வாறு தேர்வான, கோவை மேயர் கல்பனா, திருநெல்வேலி மேயர் சரவணன் ஆகியோர், உட்கட்சி பிரச்னையில் சிக்கினர்.

கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, கட்சி தலைமை அறிவுறுத்தலின்படி தங்கள் பதவிகளை, இம்மாதம் 3ம் தேதி ராஜினாமா செய்தனர்.

இதை மாநகராட்சி கமிஷனர்கள் ஏற்றனர். இவ்விரு பதவிகளும் தற்போது காலியாக உள்ளன.

எனவே, திருநெல்வேலி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலை ஆக., 5; கோவை மேயர் தேர்தலை 6ம் தேதியும் நடத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷனர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டு உள்ளார்.

அதேநாளில், காலியாகவுள்ள பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும், மறைமுக தேர்தலை நடத்தவும் அவர் உத்தரவிட்டுஉள்ளார்.






      Dinamalar
      Follow us