sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீசாரிடம் டூ-வீலரை பறித்து சென்றவர் கைது

/

போலீசாரிடம் டூ-வீலரை பறித்து சென்றவர் கைது

போலீசாரிடம் டூ-வீலரை பறித்து சென்றவர் கைது

போலீசாரிடம் டூ-வீலரை பறித்து சென்றவர் கைது


ADDED : ஜூலை 11, 2024 01:46 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி:தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே டி.காமக்காபட்டி சோதனைச்சாவடியில் தேனி, திண்டுக்கல் மாவட்ட போலீசார் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜூலை 2 அதிகாலை போலீஸ்காரர் நரேந்திரசிங், 41, செல்வராஜா, கார்த்திக் ஆகியோர் டூ-வீலர்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது டூ-வீலரில் வந்த ஒருவர் சோதனைச்சாவடியில் நிற்காமல், கொடைக்கானல் ரோட்டில் வேகமாக சென்றார். அவரை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் நரேந்திரசிங், சோதனைக்காக நிறுத்தியிருந்த, மதுரை காளிதாஸ் என்பவரின் டூ-வீலரை எடுத்துச் சென்று, விரட்டிப் பிடித்தார்.

அந்த நபரை இழுத்தபடி நரேந்திர சிங், சோதனைச்சாவடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த நபர், போலீஸ்காரரை கீழே தள்ளி, அருகில் கிடந்த, அவர் ஓட்டி வந்த டூ-வீலரை பறித்து தப்பினார்.

சோதனைச்சாவடியில் போலீசாரிடமே டூ-வீலரை பறித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் மர்ம நபரை பிடிக்க தேவதானப்பட்டி எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில், அந்த நபர், மதுரை அசோக்நகர், நாராயணகுரு மஹால் ரோட்டைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் பொன்செல்வேந்திரன், 21, என்பது, நேற்று தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us