ADDED : ஜூலை 26, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை:திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார் குப்பத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஓம் பிரகாஷ், 26. இவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம், பானாவரத்தை சேர்ந்த சந்தியா, 22, என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பேரரசி, 2, என்ற மகள் உள்ளார். ஆட்டோ டிரைவர் ஓம் பிரகாஷ், மாமியார் வீடான பானாவரத்திலேயே தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை சந்தியாவுடன் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஓம்பிரகாஷ், சந்தியாவை கத்தியால் வெட்டி கொலை செய்தார். பானாவரம் போலீசார் விசாரித்து ஓம்பிரகா ைஷ கைது செய்தனர்.

