sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊராட்சிகளில் தனி அலுவலர் நியமிக்க சட்டதிருத்தம்

/

ஊராட்சிகளில் தனி அலுவலர் நியமிக்க சட்டதிருத்தம்

ஊராட்சிகளில் தனி அலுவலர் நியமிக்க சட்டதிருத்தம்

ஊராட்சிகளில் தனி அலுவலர் நியமிக்க சட்டதிருத்தம்


ADDED : ஜன 10, 2025 11:42 PM

Google News

ADDED : ஜன 10, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள் தவிர்த்து, 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம், 2025 ஜனவரி, 5ல் முடிவடைந்தது.

எல்லை மறுவரையறை பணிகள் நிறைவடையாத நிலையில், இந்த ஊராட்சிகளில், 2025, ஜன., 5க்குள் வழக்கமான தேர்தலை நடத்த இயலாது. எனவே, இந்த ஊராட்சிகளில், 2025 ஜூலை 5 அல்லது வழக்கமான தேர்தல் நடத்தப்படும் தேதியில் எது முந்தியதோ, அதுவரை தனி அலுவலர்கள் நியமனம் செய்ய, அரசுக்கு அதிகாரம் வழங்க, ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.

ஊராட்சிகளில் அன்றாட விவகாரங்களை நிர்வகிப்பதற்காக, தனி அலுவலர்களை அரசு நியமனம் செய்துள்ளது. இந்த நியமனம் மற்றும் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை செல்லுபடியாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us