ADDED : மார் 18, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த, 21 மீனவர்கள் சில தினங்களுக்கு முன் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அவர்களையும், அவர்களின் இரு மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விரைந்து தாயகம் அழைத்து வரவும், மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

