உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 30, 2026 11:54 PM

அ நிறம் | அளவு
சென்னை: கூட்டுறவு வங்கிகளில், 75,000 ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி, அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு, 35,000 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, 5,932 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால், அனைத்து விவசாயிகள் பெற்ற கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என, பல்வேறு விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வாயிலாக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
