sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ரேஷன் கார்டில் பெயர் மாற்ற நீக்கம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வாபஸ்

/

 ரேஷன் கார்டில் பெயர் மாற்ற நீக்கம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வாபஸ்

 ரேஷன் கார்டில் பெயர் மாற்ற நீக்கம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வாபஸ்

 ரேஷன் கார்டில் பெயர் மாற்ற நீக்கம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் வாபஸ்


ADDED : நவ 14, 2025 11:23 PM

Google News

ADDED : நவ 14, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், உறுப்பினர் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற சேவைக்கு, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்' என்ற உத்தரவை, நம் நாளிதழ் செய்தியை தொடர்ந்து உணவு வழங்கல் துறை வாபஸ் பெற்றுள்ளது.

தமிழகத்தில் தற்போது, 2.25 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ள நிலையில், புதிதாக கார்டு கேட்டு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். ரேஷன் கார்டில், உறுப்பினர் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம் போன்ற சேவைகளுக்கு, பொது வினியோக திட்ட இணையதளத்தில், எத்தனை முறை வேண்டுமானாலும், விண்ணப்பிக்கும் வசதி இருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட சேவைகளை, ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு முறை, ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு முறை என, ஆண்டுக்கு இரு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என, உணவு வழங்கல் துறை இயக்குநர், இம்மாதம் 4ம் தேதி உத்தரவிட்டார்.

உறுப்பினர் பெயர் நீக்க கட்டுப்பாட்டால், புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் உருவானது. இது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நம் நாளிதழில், இம்மாதம், 7ம் தேதி விரிவான செய்தி வெளியானது. அதனால், தற்போது ரேஷன் கார்டில், ஆண்டுக்கு இரு முறை மட்டுமே, முகவரி மாற்றம், உறுப்பினர் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் குடும்பத் தலைவர் மாற்றம் போன்ற சேவைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற உத்தரவை, உணவு வழங்கல் துறை வாபஸ் பெற்றுள்ளது.

அதற்கேற்ப, எப்போது வேண்டுமானலும் விண்ணப்பிக்கும் வகையில், இணையதள மென்பொருளில் மாற்றம் செய்யும் பணி துவங்கி உள்ளது. இந்த வசதியை விண்ணப்பதாரர்கள் வரும் திங்கள் முதல் பெற முடியும்.






      Dinamalar
      Follow us