ADDED : நவ 12, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகம் முழுதும், 1,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையாக உள்ளது. மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அவற்றை மக்களுக்கு வினியோகிக்க, தி.மு.க., அரசு தவறி விட்டது.
இது, தி.மு.க., அரசின் நிர்வாக தோல்வி மட்டும் அல்ல; மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகம். தி.மு.க., அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, ஊழல் மற்றும் வெற்று விளம்பரங்களில் கவனம் செலுத்துகிறது.
இதனால், அத்தியாவசியப் பொருட்களுக்கு, ஏழை மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை மக்களின் துன்பத்திற்கு யார் பொறுப்பு. மக்களின் உணவு மற்றும் அடிப்படை உரிமைக்காக, பா.ஜ., தொடர்ந்து போராடும்.
- சுதாகர் ரெட்டி
மேலிட இணை பொறுப்பாளர், தமிழக பா.ஜ.,

