நா.த.க., வேட்பாளர்கள் வரும் பிப்., 21ல் அறிவிப்பு
நா.த.க., வேட்பாளர்கள் வரும் பிப்., 21ல் அறிவிப்பு
ADDED : டிச 02, 2025 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள், 2026 பிப்., 21ல் அறிவிக்கப்படுவர்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நா.த.க., சார்பில், கடலம்மா மாநாடு, ஆடு, மாடு மாநாடு, மலை மாநாடு என நடத்தப்பட்டு வருகிறது. மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு, 2026 பிப்., 21ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.
அதில், 234 தொகுதிகளுக்கான நா.த.க., வேட்பாளர்களை, ஒரே மேடையில் அறிவிக்க உள்ளதாக சீமான் தெரிவித்தார்.

