உள்ளடக்கத்திற்கு செல்ல

குதிரை பேரம் தவறு என்று த.வெ.க.,விடம் கூறியுள்ளோம்
குதிரை பேரம் தவறு என்று த.வெ.க.,விடம் கூறியுள்ளோம்
ADDED : ஜூலை 04, 2026 07:27 AM

அ நிறம் | அளவு
தமிழகத்தில், ஏற்கனவே கவர்னராக இருந்த ரவி, போட்டி அரசு நடத்தினார். இப்போதைய கவர்னருக்கு ஏதாவது கருத்து இருந்தால், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தீர்வு காண வேண்டுமே தவிர, தன்னிச்சையாக செயல்படுவது, அரசியல் சாசனம் அவருக்கு வழங்கிய அதிகாரத்திற்கு எதிரானது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களை, எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், குதிரை பேரம் பேசுவது தவறான செயல். இந்த போக்கு தவறானது என, த.வெ.க., தலைமையிடம் சொல்லியிருக்கிறோம். கடந்த காலங்களிலும் வழக்கு உள்ளவர்களை, கட்சிகள் மாறி மாறி சேர்த்துக் கொள்வது நடந்துள்ளது; இப்போதும் தொடர்கிறது. அவர்கள் மீதான வழக்குகளை முறையாக நடத்த வேண்டும். ஆளுங்கட்சியில் சேர்ந்து விட்டார் என்பதற்காக, வழக்குகளை நடத்தாமல் இருப்பதும், காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுவதும் தவறு. இது போன்ற செயலில் த.வெ.க., ஈடுபடக்கூடாது.
-சண்முகம்,
மாநில செயலர், மா. கம்யூ.,
