sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்திய வீரர்கள் சிறப்பான பேட்டிங்; இலக்கை நோக்கி நகரும் இந்தியா

/

இந்திய வீரர்கள் சிறப்பான பேட்டிங்; இலக்கை நோக்கி நகரும் இந்தியா

இந்திய வீரர்கள் சிறப்பான பேட்டிங்; இலக்கை நோக்கி நகரும் இந்தியா

இந்திய வீரர்கள் சிறப்பான பேட்டிங்; இலக்கை நோக்கி நகரும் இந்தியா

1


UPDATED : நவ 02, 2025 04:59 PM

ADDED : நவ 02, 2025 01:51 PM

Google News

1

UPDATED : நவ 02, 2025 04:59 PM ADDED : நவ 02, 2025 01:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹோபர்ட்: இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 187 ரன் இலக்காக நிர்ணயித்தது. இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெறும் தருவாயில் இந்திய அணி உள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா தோற்றது.

இந்த சூழலில், முக்கியமான மூன்றாவது போட்டி இன்று (நவ.,02) ஹோபர்ட், பெல்லிரைவ் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஹெட் (6), இங்லீஷ் (1), மார்ஷ் (11), ஓவன் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. ஆனால், மறுமுனையில் தனியொரு ஆளாக நிலைத்து நின்று விளையாடிய டிம் டேவிட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 38 பந்துகளில் 74 ரன் குவித்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

அதன்பிறகு, பேட்டிங் வந்த ஸ்டொய்னிஸ் மற்றும் ஷார்ட் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். ஸ்டொய்னிஸ் 39 பந்துகளில் 64 ரன் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் சேர்த்தது.

இந்தி அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டும், துபே ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணிக்கு துவக்கம் சுமாராக அமைந்தாலும், அபிஷேக் ஷர்மா (25), சூர்யகுமார் யாதவ் (24), திலக் வர்மா (29) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் அதிரடியாக விளையாடினார். இதனால், இந்திய அணி வெற்றி இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.






      Dinamalar
      Follow us