sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 கேமரூனில் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மரணம்

/

 கேமரூனில் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மரணம்

 கேமரூனில் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மரணம்

 கேமரூனில் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மரணம்


ADDED : டிச 02, 2025 01:10 AM

Google News

ADDED : டிச 02, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூஅலா: அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கேமரூன் எதிர்க்கட்சித் தலைவர் ஏனிசெட் இகானே, 74, உடல் நல பாதிப்பால் உயிரிழந்தார்.

மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனில், 1982 முதல் அதிபராக உள்ளவர் பவுல் பியா, 92. உலகிலேயே மிக வயதான அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த ஆகஸ்டில் நடந்த தேர்தலில் தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பவுல் பியா அறிவித்தார். ஆனால், தேர்தலில் மோசடி நடந்ததாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவ்வாறு ஆகஸ்டில் சிறையில் அடைக்கப்பட்ட புதிய சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கான ஆப்ரிக்க இயக்கம் என்ற கட்சியின் தலைவர் ஏனிசெட் இகானே, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறையில் நேற்று உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us