தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் நிறைவு; ஹார்முஸ் ஜலசந்தியில் கடற்படை முற்றுகையை திரும்ப பெற்றார் டிரம்ப்

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் நிறைவு; ஹார்முஸ் ஜலசந்தியில் கடற்படை முற்றுகையை திரும்ப பெற்றார் டிரம்ப்

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் நிறைவு; ஹார்முஸ் ஜலசந்தியில் கடற்படை முற்றுகையை திரும்ப பெற்றார் டிரம்ப்

29


ADDED : ஜூன் 15, 2026 07:09 AM

Follow on GoogleFavourite on Google

29

ADDED : ஜூன் 15, 2026 07:09 AM


29
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்காவும், ஈரானும் அமைதி ஒப்பந்தத்தை எட்டியதை அடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதாகவும், அதன் மீதான கடற்படை முற்றுகையை உடனடியாக அகற்றுவதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தச் சிறப்பான ஒப்பந்தம் இப்பகுதி முழுமைக்கும் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டுவரும். ஈரானுடன் அமைதியை ஏற்படுத்தப் பல அதிபர்கள் முயன்றுள்ளனர்; ஆனால் எனக்கு முன்னால் இருந்த அனைவரும் அதில் தோல்வியடைந்தனர். உண்மையான அமைதியை அடையத் தங்களுக்கு உதவக்கூடிய ஒரு அதிபரை இப்பகுதித் தலைவர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தொடர்ந்து, கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக அந்த ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்போது, எண்ணெய் விநியோகம் நடைபெறும். ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க கடற்படை முற்றுகை உடனடியாக அகற்றப்படும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஜூன் 19ல்!

விரிவான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்தார். லெபனானில் இராணுவ நடவடிக்கைகளை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் இரு தரப்பினரும் உறுதி அளித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் ஜூன் 19ம் தேதி சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படும் என ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us