sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்திய அரிசிக்கு புதிய இறக்குமதி வரி; அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு

/

இந்திய அரிசிக்கு புதிய இறக்குமதி வரி; அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு

இந்திய அரிசிக்கு புதிய இறக்குமதி வரி; அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு

இந்திய அரிசிக்கு புதிய இறக்குமதி வரி; அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு


ADDED : டிச 09, 2025 06:54 AM

Google News

ADDED : டிச 09, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: இந்திய அரிசி மற்றும் கனடா நாட்டு உரங்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்ற டிரம்ப், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்கா இனி அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வரும் அவர், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு உச்சபட்ச வரியை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வரிவிதிப்பால், அந்நாட்டை சார்ந்து வணிகம் மேற்கொண்டு வரும் இந்திய முதலீட்டாளர்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. இருநாடுகள் இடையேயான வர்த்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் இல்லாத நிலையில், இந்திய அரிசி மற்றும் கனடா நாட்டு உரங்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

குறிப்பாக, விவசாய பொருட்களின் இறக்குமதிகள், குறிப்பாக கனடாவில் இருந்து இறக்குமதியாகும் உரங்கள் மீது புதிய வரிகளை அறிமுகப்படுத்த உள்ளார். அமெரிக்க விவசாயிகளுக்கான 12 பில்லியன் நிதி உதவியை அறிவிப்பது தொடர்பாக வெள்ளை மாளிகையில் கூட்டம் நடைபெற்றது.

அப்போது,மானிய விலையில் அரிசியை இறக்குமதி செய்வது அமெரிக்க சந்தைகளை பாதிக்கிறது. இதனால் உள்நாட்டு விலையில் பாதிப்பு காணப்படுகிறது, எனவே கடுமையான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும், இந்தியா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளினால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது;

குறைந்த விலையில் அமெரிக்க சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் உள் நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சவாலாக உள்ளது. இது கவனத்தில் கொள்ளப்படும்.

பெரும்பாலான உரங்கள் கனடாவில் இருந்து இங்கே வருகின்றன. எனவே தேவைப்பட்டால் அவற்றின் மீது கடுமையான வரிகளை விதிப்போம். நீங்கள் என்னிடம் வலியுறுத்த விரும்புவதும் இதுதான். அதை இங்கே செய்ய முடியும்.

இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.






      Dinamalar
      Follow us