விறைப்பான அரைக்கால் சட்டை, பெரிய தொப்பி யுடன் (அப்போதும்) வேடிக்கை பார்த்தபடி ஒரு போலீஸ்காரர் நிற்க, கைவண்டிக்காரர்கள் வழியை மறித்து, தங்களது வண்டிகளை போட்டிருக்கும், இந்த இடம் தான், கொத்தவால் சாவடி.
கடந்த, 1803ம் ஆண்டில் இருந்து செயல்படும், இந்த கொத்தவால் சாவடிதான், ஒரு காலத்தில் மொத்த சென்னைக் கும் தேவைப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் வினியோகித்து வந்தது.
பின், இட நெருக்கடி காரண மாக, 1996ம் ஆண்டு முதல் கோயம்பேடு பகுதிக்கு மொத்த காய்கறி கடைகள் இடம் பெயர்ந்தன. அதன் பின், எப்போதும் சேறும், சகதியுமாக இருந்த கொத்தவால் சாவடி சாலை கொஞ்சம் சிமென்ட் பூசிக்கொண்டது.
கைவண்டிக்கு பதிலாக டிரக், ஆட்டோ போன்ற வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளன. இப்போதும் கொத்தவால் சாவடியில் காய்கறி கள் மற்றும் பழங்கள் விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது கூடுதலாக உலர்பழங்கள் மற்றும் வெளியூர், வெளிநாட்டு பழங்களும் கிடைக்கின்றன.
ஆனாலும், கொத்தவால் சாவடி யின் நெரிசல் அப்படியே தான் இருக்கிறது.
- எல்.முருகராஜ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE