360 டிகிரி கோணத்தில் பள்ளிவாசல், தேவாலயம்

Updated : அக் 13, 2010 | Added : அக் 13, 2010 | கருத்துகள் (76) | |
Advertisement
தினமலர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, 360 டிகிரி கோணப் பகுதியில்  கோயில்களின் முழுமையான தரிசனம்  அனைத்து  வாசகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தப் பகுதியில் இதுவரை இந்து கோயில்கள் மட்டுமே  வெளியிடப்பட்டிருந்தது.  மற்ற மத வாசகர்களும் தங்களுடைய புனித தலங்கள் இதில்  வெளியாக வேண்டும் என்று  கோரியிருந்தனர். வாசகர்களின் கருத்துக்கு
360 டிகிரி கோணம், பள்ளிவாசல், தேவாலயம்

தினமலர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, 360 டிகிரி கோணப் பகுதியில்  கோயில்களின் முழுமையான தரிசனம்  அனைத்து  வாசகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தப் பகுதியில் இதுவரை இந்து கோயில்கள் மட்டுமே  வெளியிடப்பட்டிருந்தது.  மற்ற மத வாசகர்களும் தங்களுடைய புனித தலங்கள் இதில்  வெளியாக வேண்டும் என்று  கோரியிருந்தனர். வாசகர்களின் கருத்துக்கு மதிப்பு தரும் தினமலர், அவர்களுடைய  விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களை 360 டிகிரி கோணத்தில் பார்க்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு அனைத்து வாசகர்களும் முழு ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.  


360 டிகிரி கோணத்தில் பள்ளிவாசல், தேவாலயம் பார்க்க : http://www.dinamalar.com/360view_main.asp


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (76)

Vijayan Balamurugan - snkl,இந்தியா
22-நவ-201112:46:40 IST Report Abuse
Vijayan Balamurugan சங்கரன்கோவில் உள்ள புகழ் பெற்ற சுவாமி: சங்கரனாரயனர் சுவாமி ,கோமதி அம்மன் & சங்கரலிங்க சுவாமி பற்றி நம் நாட்டு மக்களுக்கு தெரிய உங்கள் 360 டிகுரியில் சேர்க்க வின்னப்பிக்குறேன்.
Rate this:
Cancel
இண்டி Ram - Indy,யூ.எஸ்.ஏ
04-டிச-201017:50:29 IST Report Abuse
இண்டி Ram திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலின் அடிவாரத்தின் தோற்றத்தை வெளியிட்டுள்ளீர் மலைமேல் ஏறினால் ஒரு பிரம்மாண்டமான தோற்றம் இருக்குமே. பொன்மலை, காவேரி நதி, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், வாழைவயல்கள் அதெல்லாம் கண்கொண்ணா காட்சி அதையும் டிஜிட்டல் கேமராவில் எடுத்து இணைக்க கேட்டுகொள்கிறேன் நன்றியுடன் இண்டி ராம்
Rate this:
Cancel
கஷேஆஹக - Manickapore,இந்தியா
01-நவ-201015:37:21 IST Report Abuse
கஷேஆஹக மதுரையை சேர்ந்த மன்சூர் அஹ்மத் சகோதரர் அவர்களே… உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள்… அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் தினமலர் இந்த (360 டிகிரி கோண படம்) முயற்சியை மேற்கொண்டு உள்ளது இதை நாம் தக்கவைத்து கொள்ள வேண்டும். இது உங்கள் கொள்கையை உடையவருக்காக மட்டும் அல்ல இது அனைத்து வித மக்களுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் தர்காக்கள் அனாச்சாரங்கள் நிறைந்த இடம் என்று கூறியுள்ளீர்கள். இது பலரின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. நீங்கள் தர்காவை குறை கூறுவது உங்கள் முன்னோர்களை குறை கூறுவது ஆகும். காரணம் எந்த ஒரு தர்காவும் சமீப காலத்தில் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிட்த்தக்கது. தர்காக்களை முஸ்லீம்கள் வெறுக்ககூடிய இடம் என்ற தவறான கருத்தையும் நீங்கள் கூறியுள்ளீர்கள். அப்படி வெறுப்பது உண்மை என்றால் பல்லாயிர வருடமாக முஸ்லீம்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். முதல் மனிதனான ஆதம் நபியின் மகனுடைய தர்கா தமிழகத்தில் உள்ளது. உங்கள் கூற்றுபடி பார்த்தால் ஆதம் முதல் இன்று வரை எந்த ஒரு முஸ்லீமும் விளங்காத ஒரு விஷயத்தை நீங்கள் விளங்கி உள்ளீர்கள். நமது நாட்டில் எதுவும் அர்த்தம் இல்லாமல் உருவாகி இருக்க முடியாது அந்த அர்த்தத்தை அறிய முயற்சி செய்யுங்கள். அதை விட்டு விட்டு மக்களின் மனம் புண்படும் வகையில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு கஷேஆஹக – மாணிக்கபூர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X