சென்னை: முதல்வர் பதவி கிடைத்தும், அதை கொண்டாட முடியாததால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு, முதல்வர் பதவி கிடைத்தது அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா என்ற விவாதம் துவங்கியுள்ளது.
தமிழக முதல்வராக, இரண்டாவது முறையாக, ஓ.பன்னீர்செல்வம் நேற்று பொறுப்பேற்றார்.
இதற்கு முன், 2001 செப்டம்பரில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஜெயலலிதா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.அதைத் தொடர்ந்து, முதல்வர் பதவி ஓ.பன்னீர்செல்வத்திற்கு வந்தது. அவரால் அந்த பதவியை, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அதேபோல், 13 ஆண்டுகளுக்கு பின், அதே செப்டம்பர் மாதம், இரண்டாவது முறையாக, முதல்வர் பதவி, அவரை தேடி வந்துள்ளது.இம்முறையும், அவரால் மகிழ்ச்சியை கொண்டாட முடியாத நிலை. இப்பதவியில் இருந்த ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், முதல்வர் பதவி, அவருக்கு வந்துள்ளது.ஜெயலலிதா சிறையில் இருக்கும் துக்கத்தில் இருப்பதால், அவரால் முதல்வர் பதவியை, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை. இதனால், உயர் பதவி கிடைத்தும், மகிழ்ச்சி அடைய முடியாத நிலையில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளார்.இது, அவரது அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா என, கட்சியினரிடம் விவாதம் எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE