மாணவன் கடத்தலில் வழக்கு பிரிவுகள் மாற்றம்

Added : நவ 06, 2010 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : மாணவனை கடத்திய வழக்கில் சிக்கிய இருவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன. சென்னை அண்ணா நகரை சேர்ந்த கீர்த்திவாசன் என்ற பள்ளி மாணவன் கடந்த திங்கள் கிழமை கடத்தப்பட்டு, மறுநாள் போலீசாரால் மீட்கப்பட்டான். கடத்திய இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ., பட்டதாரிகள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 98 லட்சத்து 73

சென்னை : மாணவனை கடத்திய வழக்கில் சிக்கிய இருவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன. சென்னை அண்ணா நகரை சேர்ந்த கீர்த்திவாசன் என்ற பள்ளி மாணவன் கடந்த திங்கள் கிழமை கடத்தப்பட்டு, மறுநாள் போலீசாரால் மீட்கப்பட்டான். கடத்திய இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ., பட்டதாரிகள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 98 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயையும் மீட்டனர். இருவரும் தற்போது புழல் ஜெயிலில் உள்ளனர். இவர்கள் மீது போலீசார் ஏற்கனவே மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். தற்போது வழக்கு பிரிவுகளில் போலீசார் சிறிய மாற்றத்துடன் கூடுதலாக ஒரு பிரிவையும் சேர்த்துள்ளனர். வழக்கின் தன்மை கருதி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் சட்டப் பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Advertisement


வாசகர் கருத்து (1)

சித் - chennai,இந்தியா
07-நவ-201010:56:37 IST Report Abuse
சித் காவல் துறைக்கு பாராட்டுகள் சொல்ற இந்த வேளைல, இனி இதுபோன்ற குற்றங்கள் நடக்காதவண்ணம், இந்த மாதிரி ஹை-டெக் குற்றவாளிகளை சுட்டுப் பிடித்தால் தான் மற்றவர்களுக்கு பயம் வரும்... நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன்படாத இந்த படித்த மேதைகளை பிணமாய் பிடித்திருந்தால் மனித உரிமை மீறல் என்ற பிரச்னை என்று ஏதும் ஏற்படாது... சில புல்லட்ல முடியுற சம்பவத்தை இனி பல மாதம் இழுத்து அடிச்சு கோர்ட்ல தண்டனை வாங்கி தந்து, சிறைக்கு அனுப்பி, இவனுக திரும்பி வரும்போது, சிறையில் கிரிமினல்ட்ட கத்துகிட்ட பாடத்தால இன்னும் ப்ரில்லியண்டா குற்றம் செய்வானுக...அப்புறமுமும் இவனுக பின்னாடியே போலீஸ் திரியனும்... பேட்டை ரௌடிகளை விட இவனுக ரொம்ப டேன்ஜெர்... இப்பகூட ஒண்ணும் கெட்டுப்போகல... ரெண்டுபெருல ஒருத்தனை காலி பண்ணுங்க...ப்ளீஸ்... தண்டனைகள் கடுமையனாதான் குற்றங்கள் குறையும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X