இரண்டாயிரம் கோழி, 800 ஆடுஅறுத்து விடிய, விடிய  விருந்து
இரண்டாயிரம் கோழி, 800 ஆடுஅறுத்து விடிய, விடிய விருந்து

இரண்டாயிரம் கோழி, 800 ஆடுஅறுத்து விடிய, விடிய விருந்து

Added : ஆக 04, 2015 | கருத்துகள் (12) | |
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் 2 ஆயிரம் கோழி, 800 ஆடுகள் சமைத்து அனைத்து மதத்தினரும் பங்கேற்ற சமபந்தி விருந்து நடந்தது.திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் திருவிழா கடந்த ஆக.2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பாதிரியார் ஆரோக்கியசாமி தலைமை யில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.ஊர் பொதுமக்கள்
 இரண்டாயிரம் கோழி, 800 ஆடுஅறுத்து விடிய, விடிய  விருந்து

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் புனித செபஸ்தியார் சர்ச் திருவிழாவில் 2 ஆயிரம் கோழி, 800 ஆடுகள் சமைத்து அனைத்து மதத்தினரும் பங்கேற்ற சமபந்தி விருந்து நடந்தது.திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் திருவிழா கடந்த ஆக.2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 6 மணிக்கு பாதிரியார் ஆரோக்கியசாமி தலைமை யில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது.ஊர் பொதுமக்கள் சார்பாகவும், சங்கங்கள், குடும்பங்கள், வெளியூர் பொதுமக்கள் சார்பாக செபஸ்தியாருக்கு ஆடு, கோழி, அரிசி காணிக்கையாக அளிக்கப்பட்டது. இதில் 2 ஆயிரம் கோழிகள், 800 ஆடுகள், 130 மூடை அரிசி கிடைத்தது. அனைத்து மதத்தினரும் ஆடு, கோழி, அரிசியை காணிக்கையாக செலுத்தினர். இதில் வந்த மாடு மற்றும் சில பொருட்கள் உடனடியாக ஏலம் விடப்பட்டு, அந்த தொகை சர்ச் நிதியில் சேர்க்கப்பட்டது. திண்டுக்கல் அருகேயுள்ள கிராமத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.சமபந்தி விருந்து: நேற்று மாலை 6 மணிக்கு சமபந்தி விருந்து துவங்கியது. முதல் கட்டமாக 800 கோழி, 135 ஆடுகள் அறுக்கப்பட்டு பொது விருந்து விடிய, விடிய நடந்தது. இன்று பகல் 1 மணி வரை நடக்கிறது. பகல் 2 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை பாதிரியார் சேவியர் ராஜ், ஊர் பொதுமக்களும் செய்துஉள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (12)

Sathiyan Jesudass - Doha,கத்தார்
05-ஆக-201513:35:04 IST Report Abuse
Sathiyan Jesudass செபஸ்தியார் ஆடு,கோழிய பலி கேட்டாரா? நீங்க நல்ல திங்கிறதுக்கு ஒரு திருவிழா? மூட பழக்கத்துக்கு ஒரு அளவே இல்லையடா...? உங்களையெல்லாம் எத்தனை பெரியார் தோன்றினாலும் உங்கள திருத்த முடியாதுடா...
Rate this:
Cancel
S.Kannan - Thiruchy,இந்தியா
05-ஆக-201512:20:11 IST Report Abuse
S.Kannan இத்தனை உயிர்களை பலி வாங்கி விருந்து படைத்திடவா இயேசுபிரான் நமக்கு போதித்தார்???
Rate this:
Cancel
ஜெருயான் யோகராஜா - Wermelskirchen,ஜெர்மனி
05-ஆக-201511:09:23 IST Report Abuse
ஜெருயான் யோகராஜா தினமலர் பாணியில் சொல்லவேண்டுமென்றால் " பொதுமக்களுக்குக் கொண்டாட்டம் ஆடுகளுக்குத் திண்டாட்டம் ".
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X