ஆதரவற்ற மனநோயாளிகளை அரவணைக்கும் இளைஞர்கள்
ஆதரவற்ற மனநோயாளிகளை அரவணைக்கும் இளைஞர்கள்

ஆதரவற்ற மனநோயாளிகளை அரவணைக்கும் இளைஞர்கள்

Added : செப் 19, 2015 | கருத்துகள் (7) | |
Advertisement
திண்டுக்கல்: தெருவோரங்களில் ஆதரவின்றி திரியும் மனநோயாளிகளுக்கு உணவு, உடை, மருத்துவ சிகிச்சை அளித்து, முடிவெட்டி பராமரிக்கும் இளைஞர் சேவை குழுவினர் திண்டுக்கல்லில் முகாமிட்டுள்ளனர்.திருவண்ணாமலை தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் பி.மணிமாறன்,30. இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து, உலக மக்கள் சேவை மையத்தை கடந்த 2002ல் துவக்கினர். இந்த மையம் மூலம் தெருக்களில் ஆதரவற்று திரியும்
ஆதரவற்ற மனநோயாளிகளை அரவணைக்கும் இளைஞர்கள்

திண்டுக்கல்: தெருவோரங்களில் ஆதரவின்றி திரியும் மனநோயாளிகளுக்கு உணவு, உடை, மருத்துவ சிகிச்சை அளித்து, முடிவெட்டி பராமரிக்கும் இளைஞர் சேவை குழுவினர் திண்டுக்கல்லில் முகாமிட்டுள்ளனர்.

திருவண்ணாமலை தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் பி.மணிமாறன்,30. இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து, உலக மக்கள் சேவை மையத்தை கடந்த 2002ல் துவக்கினர். இந்த மையம் மூலம் தெருக்களில் ஆதரவற்று திரியும் மனநோயாளிகள், தொழுநோயாளிகள், ஆதரவற்றவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ உதவிகள் செய்கின்றனர். எண்ணெய் காணாமல் சடை முடியுடன் திரியும் சில மனநோயாளிகளுக்கு முடிவெட்டி, ஷேவிங் செய்தும் உதவுகின்றனர்.


முதல்வர் விருது:

இந்த மையத்தின் தலைவர் மணிமாறனின் சேவையை பாராட்டி கடந்த ஆக.15ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா, இளைஞர் விருது வழங்கினார். மணிமாறன் தலைமையிலான குழுவினர் நேற்று திண்டுக்கல் வந்துள்ளனர். இவர்கள் பலகுழுவாக பிரிந்து மாவட்டம் முழுவதும் ரோட்டோரம் தங்கி இருக்கும் ஆதரவற்றோருக்கு உணவு, உடை, மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர்.

மணிமாறன் கூறியதாவது: இச்சேவை மையத்தை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் துவக்கி வைத்தார். இதற்கு முதல்வரும் எனக்கு பரிசளித்துள்ளார். குறிப்பாக தொழுநோயாளிகளை தொடுவதற்கு கூட சிலர் அஞ்சுவர். நாங்கள் அவர்களின் கால்களில் உள்ள புழுக்களை அகற்றி, சிகிச்சை அளிக்கிறோம்.மனநோயாளிகளிடம் ஒரு மணிநேரம் பழகி சிகிச்சை அளிப்போம். மனநோயாளிகள் என்னை தாக்கியதில், முகத்தில் வடுக்கள் உள்ளது. இதற்காக நான் அஞ்சவில்லை. ரோட்டோரம் இறந்து கிடந்த 138 அனாதை பிணங்களை எனது சொந்த செலவில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளேன். டில்லி,உ.பி., பீகார், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உட்பட 18 மாநிலங்களுக்கும் சென்று சேவை செய்துள்ளேன்.

1,300 மனநோயாளிகள், 50 ஆயிரம் தொழுநோயாளிகள் உட்பட ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு உதவிகள் செய்துள்ளேன். துணி ஏற்றுமதி செய்து, அந்த வருமானத்தில் கிடைக்கும் தொகையை சேவைக்கு பயன்படுத்துகிறேன். இதற்காக யாரிடமும் கையேந்தவில்லை, என்றார். இவரை 99656 56274ல் தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (7)

Manian - Chennai,இந்தியா
20-செப்-201501:00:37 IST Report Abuse
Manian தம்பி மணிமாறா, இதுதான் கடவுள் ஒனக்கு வச்சியிருக்கிற சிறு சோதனை.. அவரே அதேலே வெற்றி பெற வழி காட்டுவாரு.. எல்லா முயற்சியுமே தனி மனிதன் மூலம் தான் வருகுது.நம்ம சுப்பு சாரு தனியாவே செடிக்கு தண்ணி ஊத்தினாறு. அப்பால மத்தவங்களுமெ சேந்து கிட்டாக இல்லெ? கமிட்டி போட்டா ஈக்கோதான் மிஞ்சூம். ஏதாச்சும் அரசியல் ஆதாயம் தேடுவானுக. ஆனா தம்பி ஒணுக்குமே ஒதவி தேவை. அப்போ ஒண்னிய மாதிரி நல்ல மனசுள்ள பயலுகளைய தேடு. இந்த மாதிரி இருக்குற ஆளுக வீட்டிலேயே இருப்பாணுக. ரிடயர்டு ஆனா நல்ல ஆளுகளை டாக்டரு, மனோதத்துவ நிபுணருகளை எல்லாம் லிஸ்டு போட்டு தேடு. எல்லா பொருப்புகளியுமெ ஒன் தலியிலே போட்டுகாதே. அப்பால அதையே மொறை படுத்தி மொதல்லே என்னா செய்யணும், அப்புறம் என்ன செய்யணும்னு அதை வரிசை படுத்து. ஒரு மாஸ்டர் பிளாண் போடு. காசு வாங்கிகாதே. என்னான ஒடனே அதை தட்டி பறிக்க ஒரு திருட்டு கூட்டமே வரும். அவநுகளுக்கு டாஸ்மார்க்கு பணம் வேணும். அப்பால இந்த மின் வலை தளம், கம்பியூட்டர் சயின்சு (உணமையிலே படிச்சவனுக) மூலம் ஒன்னியே மாதிரி வெறெ யாரு யாரு ஏங்கிட்டு செய்யுறானுகன்னு பாரு. ஒதவி சேய்யிரத வக்கீலுகலையெ கண்டு பிடி. அவங்க மூலமா அடுத்த அடி எடுத்து வை. ஒனக்கு ஆண்டவன் எல்லா ஒதவியும் செய்ய ஆசிகள். நான் சொல்லுவதில் முக்கால் வாசி தம்பி நீ ஏற்கவே செய்குறே. தொழு நோய் மருந்து பேர் சொல்லு. எனது அமெரிக்க நணபர்கள் மூலம் அது எலவசமா கிடைக்க முயற்சி செய்வென். பின்னாலே ஒரு நாள் நானும் ஓங்கூட சேன் சேந்துக்குவேன். இப்போ ஒனக்கு அம்மா மூலம் பேரு வந்தீரிக்சு. ஜாகரதயா இருகோணும்.
Rate this:
Cancel
Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ
19-செப்-201515:36:33 IST Report Abuse
Nalanvirumbi வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் சேவை தொடரட்டும்.
Rate this:
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
19-செப்-201514:40:21 IST Report Abuse
Raj Pu தொழுநோய் துறை என்று உள்ளது, இது வெளிநாட்டு உதவியுடம் இயங்குகிறது, இவர்கள் கணக்கு படி தமிழ்நாட்டில் தொழுநோய் நோயாளிகள் இல்லை என்று தகவல் கூறுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X