தானே,:மகாராஷ்டிராவில், தேசியவாத காங்., கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆசிஷ் தாம்லே, இரண்டு கோடி ரூபாய் கேட்டு, தனக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம், தானே நகர போலீஸ் ஸ்டேஷனில், ஆசிஷ் தாம்லே, தனக்கு மிரட்டல் வந்ததாக புகார் அளித்துள்ளார். அப்புகார் குறித்து, மூத்த போலீஸ் அதிகாரி அசோக் வாண்டேகர் கூறியதாவது:ஆசிஷ் தாம்லே அளித்த புகாரில், கடந்த, 20ம் தேதி, சுரேஷ் பூஜாரி என்பவரிடமிருந்து, சர்வதேச தொலைபேசி எண் மூலம் தன் தந்தைக்கு அழைப்பு வந்ததாகவும், இரண்டு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.பணம் தராவிட்டால், ஆசிஷ் தாம்லே, கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், ஆசிஷ் தாம்லேவின் வீட்டை, தன் கூட்டாளிகள் கண்காணித்து வருவதாக அந்த நபர் கூறியதாகவும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்; இதுவரை, யாரும் கைது செய்யப்படவில்லை. இவ்வாறு, போலீஸ் அதிகாரி அசோக் வாண்டேகர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE