திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த, அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இதில், 180 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பி.டி.ஓ., வின் உதவியாளர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தபோது, சில தொழிலாளர்கள் பணியில் இல்லாமல் வீட்டிற்கு சென்றிருந்தது தெரியவந்தது. இதனால், அந்த தொழிலாளர்களின் வருகை பதிவேட்டினை பி.டி.ஓ.வின் உதவியாளர் எடுத்து சென்று விட்டார். இதனால் தொழிலாளர்கள் நேற்று வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பணிதள பொறுப்பாளரும், வருகை பதிவேடு புத்தகம் இல்லாததால் வேலை வழங்க முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் காலை, 10 மணிக்கு சதாகுப்பம் தண்டராம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறைபிடித்தனர். இது குறித்து தகவலறிந்த, வானாபுரம் போலீசார் சம் பவ இடத்திற்கு வந்து, தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE