திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், முன் விரோதம் காரணமாக, கார் மீது பெட்ரோல் குண்டு வீசியதில், பஞ்சாயத்து தலைவர் மகன் உள்பட, மூன்று பேர் படுகாயமடைந்தனர்.திருவண்ணாமலை அடுத்த, மல்செட்டிப்பட்டை சேர்ந்த, அ.தி.மு.க., பஞ்சாயத்து தலைவர் வேலாயுதம். இவரது மகன் விஜய், 35. இவருக்கும் பாவாஜி நகரை சேர்ந்த கருணாமூர்த்தி மகன் கவுதம், என்பவருக்கும் , மூன்று மாதங்களுக்கு முன், சாத்தனூர் அணையில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், விஜய் மற்றும் அவரது நண்பர் விஜய் வெங்கடேசன், 43, கீழ் சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த இளமுருகன், 43, ஆகிய ,மூவரும் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை செங்கம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அக்னி லிங்க குளம்அருகே இரவு, 10 மணியளவில் , பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென காரை வழிமறித்து, காரின் கண்ணாடியை உடைத்து, பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில், கார் தீப்பிடித்து எரிந்தது. மேலும், விஜய் மற்றும் அவருடன் வந்த நண்பர்களை சரமாரியாக தாக்கினர். அப்போது அவர்கள் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்தததை கண்டதும், மர்ம நபர்கள் தப்பி ஓடினர். படுகாயமடைந்த விஜய், அவரது நண்பர் வெங்கடேசன்,43, கீழ் சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த இளமுருகன்,43, ஆகியோரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எஸ்.பி.,பொன்னி, டி.எஸ்.பி.,சரவணகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கருணாமூர்த்தி, 60, தியாகி அண்ணாமலை நகரை சேர்ந்த வினோத், 22, அண்ணாநகரை சேர்ந்த தமிழ்செல்வன்,30,ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE