நிபந்தனையற்ற பேச்சுக்கு ரெடி : நவாஸ்
நிபந்தனையற்ற பேச்சுக்கு ரெடி : நவாஸ்

நிபந்தனையற்ற பேச்சுக்கு ரெடி : நவாஸ்

Added : நவ 28, 2015 | கருத்துகள் (6) | |
Advertisement
வாலட்டா: இந்தியாவுடன் நல்லுறவையே விரும்புகிறோம் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெ ரீப் கூறியுள்ளார் . காமன்வெல்த் நாட்டு தலைவர்கள் கூட்டம் தொடர்பான ஆலோசனைக்கு நவாஸ் ஷெ ரீப் சென்றுள்ளார். மால்டாவில் நடந்த கூட்டத்தில் பிரிட்டன் பிரதமர் கேமரூனை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார் .தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில்; எங்களின் அண்டை நாடான இந்தியா மற்றும்
Pakistan ready for talks with India without preconditions: Nawaz Sharifநிபந்தனையற்ற பேச்சுக்கு ரெடி : நவாஸ்

வாலட்டா: இந்தியாவுடன் நல்லுறவையே விரும்புகிறோம் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெ ரீப் கூறியுள்ளார் . காமன்வெல்த் நாட்டு தலைவர்கள் கூட்டம் தொடர்பான ஆலோசனைக்கு நவாஸ் ஷெ ரீப் சென்றுள்ளார்.


மால்டாவில் நடந்த கூட்டத்தில் பிரிட்டன் பிரதமர் கேமரூனை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார் .தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில்;


எங்களின் அண்டை நாடான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் நல்லுறவையே விரும்புகிறோம். அமைதியை பேணிக்காத்திட இந்தியாவுடன் எவ்வித முன் நிபந்தனையுமின்றி பேச்சு நடத்த தயார் . சமீபத்தில் பாரிசில் நடந்த பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் வன்மையாக கண்டிக்கிறது . பயங்கரவாதத்தினால் பிரான்ஸ் பெற்ற துன்பத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். இவ்வாறு நவாஸ் கூறினார் .


சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா- பாகிஸ்தான் இடையில் செயலர் அளவில் பேச்சு நடக்கவிருந்தது ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளை சந்தித்து பேசுவோம், இரு நாட்டு பேச்சு நடக்கும் போது பிரிவினைவாதிகளும் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.


இதனால் அதிர்ச்சி அடைந்த இந்தியா இந்த நிபந்தனை எதுவும் விதிக்க முடியாது என பேச்சு வார்த்தையை இந்தியா ரத்து செய்தது. இந்நிலையில் நவாஸ் நிபந்தனையற்ற பேச்சுக்கு தயார் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (6)

Nisha Rathi - madurai,இந்தியா
29-நவ-201513:31:40 IST Report Abuse
Nisha Rathi நீ எப்போதும் இப்படி தான் பேசுவே. அதன் பிறகு மாத்தி பேசுவே. உன்னை பற்றி தெரியும். உன் ஊரு பத்தியும் தெரியும்
Rate this:
Cancel
skandh - chennai,இந்தியா
29-நவ-201509:13:59 IST Report Abuse
skandh பேச்சும் வேண்டாம் வார்த்தையும் வேண்டாம். நாமும் அவர்களின் சாவிலும் எந்த உதவியும் செய்ய வேண்டாம். இது தான் மொத்த இந்திய மக்களின் எண்ணம்.வாலாட்டினால் செகண்ட் சான்சும் கொடுக்க வேண்டாம். முதலிலேயே வாலை ஓட்ட நறுக்க வேண்டும்.
Rate this:
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
29-நவ-201508:51:14 IST Report Abuse
Sundeli Siththar இவங்க மட்டும் நிபந்தனை விதிப்பாங்களாம் .. நாம நிபந்தனை விதிக்கக்கூடாதாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X