திருச்சியில் இருந்து சென்னைக்கு தினமும் 15,000 சிலிண்டர் சப்ளை
திருச்சியில் இருந்து சென்னைக்கு தினமும் 15,000 சிலிண்டர் சப்ளை

திருச்சியில் இருந்து சென்னைக்கு தினமும் 15,000 சிலிண்டர் சப்ளை

Added : டிச 06, 2015 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னையில் வினியோகிக்க, பிற மாவட்டங்களில் இருந்து, தினமும், 15 ஆயிரம் சமையல் காஸ் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட உள்ளன.மத்திய அரசின், எண்ணெய் நிறுவனங்களுக்கு, திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார், மணலி, கும்மிடிப்பூண்டியில், சமையல் காஸ் சிலிண்டர் நிரப்பும் மையங்கள் உள்ளன. இவற்றில், வௌ்ள நீர் புகுந்ததால், காஸ் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சென்னை, காஞ்சி,
Gas from tiruchy to chennaiதிருச்சியில் இருந்து சென்னைக்கு தினமும் 15,000 சிலிண்டர் சப்ளை

சென்னையில் வினியோகிக்க, பிற மாவட்டங்களில் இருந்து, தினமும், 15 ஆயிரம் சமையல் காஸ் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட உள்ளன.

மத்திய அரசின், எண்ணெய் நிறுவனங்களுக்கு, திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார், மணலி, கும்மிடிப்பூண்டியில், சமையல் காஸ் சிலிண்டர் நிரப்பும் மையங்கள் உள்ளன. இவற்றில், வௌ்ள நீர் புகுந்ததால், காஸ் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சென்னை, காஞ்சி, திருவள்ளூரில், காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.இதையடுத்து, பிற மாவட்டங்களில் உள்ள காஸ் நிரப்பும் மையங்களில் இருந்து, சென்னைக்கு தினமும், 15 ஆயிரம் சிலிண்டர்கள் கொண்டு வர, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை, காஞ்சி, திருவள்ளூரில், தினமும், ஒரு லட்சம் பேர், காஸ் சிலிண்டர் முன் பதிவு செய்வர். தற்போது, வௌ்ள பாதிப்பால், பலர், வீடுகளை விட்டு வௌியேறி உள்ளனர். இதனால், சிலிண்டர் முன் பதிவு, 20 ஆயிரம் என்றளவில் உள்ளது.இந்நிலையில், மணலி, எண்ணுார், கும்மிடிப்பூண்டி மையங்களில் தண்ணீர் சூழ்ந்ததால், ஆலைகளை இயக்க முடியவில்லை. இதனால், திருச்சி, சேலம், செங்கல்பட்டில் இருந்து, சென்னைக்கு தினமும், 15 ஆயிரம் சிலிண்டர் என, டிச., 14 வரை, கொண்டு வரப்பட உள்ளன.மணலி, எண்ணுாரில் உள்ள காஸ் நிரப்பும் மையங்களில், தண்ணீர் அகற்றும் பணி நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தண்ணீரில் சென்ற 'புக்':

வௌ்ள நீர் புகுந்த வீடுகளில், எண்ணெய் நிறுவனங்கள் வழங்கிய, காஸ் சிலிண்டர் புத்தகம் உட்பட, முக்கிய ஆவணங்கள், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால், பாதிக்கப்பட்டவர்கள், காஸ் ஏஜன்சிக்கு சென்று, முகவரியை தெரிவித்தால் போதும். அவர்களின் பதிவு எண் கண்டறிந்து, மாற்று புத்தகம் வழங்கப்படும்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (2)

K.Sugavanam - Salem,இந்தியா
06-டிச-201508:53:09 IST Report Abuse
K.Sugavanam மத்தியமாநில அரசுகளின் மீட்புப் பணி பாராட்டத் தக்கது..Hats Off ....
Rate this:
Cancel
K.RAVI - Panipat Haryana,இந்தியா
06-டிச-201504:23:47 IST Report Abuse
K.RAVI பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் வேகம் பாராட்டப்படவேண்டியது. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு பகுதிகளுக்கும் பெட்ரோலிய பொருட்களை உரிய நேரத்தில் சேர்த்து தங்கள் நாட்டுப்பற்றை நிரூபித்து விட்டார்கள். மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்துக்கு உட்பட.பல பங்குகளில் நீர் புகுந்திரிந்தபோதும் விரைவான செயல் ஆற்றலால் மக்களின் போக்குவரத்துக்கு இந்த இக்கட்டான நேரத்தில் உதவி இருக்கிறார்கள். இந்த சோதனை காலத்தில் மக்களுக்கு உண்மையில் சேவை புரிவதில் அரசு ஊழியர்களின் பணி மகத்தானது. வாழ்க பாரதம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X