பல்லடம் : புதர்மண்டி கிடக்கும் பாச்சாங்காட்டுபாளையம் தடுப்பணையை, உடனடியாக தூர்வார வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாச்சாங்காட்டுபாளையத்தில், ஓடையில் இருந்து வரும் நீரை தேக்கும் குட்டையும், தடுப்புணையும் உள்ளது. சில ஆண்டுகளாக நீடித்த வறட்சியால், நீராதாரம் இன்றி காணப்பட்டன. தடுப்பணை சரிவர பராமரிக்கப்படாததால், நீர் தேங்கும் பகுதிகளில், கருவேல மரங்கள் மற்றும் முட்புதர் மண்டியுள்ளன; நீர்வழித்தடம் தடைபட்டுள்ளது.கடந்தாண்டும், நடப்பாண்டும் மழை பெய்தபோது, புதர்மண்டி கிடக்கும் பாச்சாங்காட்டுபாளையம் தடுப்பணையில், கொஞ்சம் தண்ணீர் சேகரமானது. எனினும், வெளியேறும் பாதை தடைபட்டு, ஓடைப்பாலத்தை கடந்து, நீர் ஓடியது. இதனால், பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், கடும் பாதிப்புக்குள்ளாகினர். பொதுமக்கள் கூறுகையில், "இப்பிரச்னை குறித்து, ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித பயனுமில்லை. தடுப்பணையை தூர்வார, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE