கூடங்குளத்தில் மேலும் இரு அணு உலைகள்
கூடங்குளத்தில் மேலும் இரு அணு உலைகள்

கூடங்குளத்தில் மேலும் இரு அணு உலைகள்

Added : டிச 21, 2015 | கருத்துகள் (24) | |
Advertisement
புதுடில்லி:இந்தியா - ரஷ்யா இடையே, அணுசக்தி துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியின், ரஷ்ய பயணத்தின் போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.இதுபற்றி, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி, 23ல், ரஷ்ய பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டு தலைநகர்
Two more  nuclear plants in Koodankulamகூடங்குளத்தில் மேலும் இரு அணு உலைகள்

புதுடில்லி:இந்தியா - ரஷ்யா இடையே, அணுசக்தி துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியின், ரஷ்ய பயணத்தின் போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

இதுபற்றி, அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி, 23ல், ரஷ்ய பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டு தலைநகர் மாஸ்கோவில், 23, 24ம் தேதிகளில், ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடினுடன், வருடாந்திர உயர்மட்ட கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார்.இக்கூட்டத்தின் போது, இந்தியா - ரஷ்யா இடையே, அணுசக்தித் துறையில் ஒத்துழைப்பைஅதிகரிக்கும் நோக்கில், பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அவற்றில் ஒன்றாக, தமிழகத்தின் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில், ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில், இருவரும் கையெழுத்திடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள அணுசக்தி கட்டமைப்புகளை, அதிகபட்ச பயன்பாட்டுக்கு உட்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், அதிகரித்து வரும் மின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு வட்டாரங்கள் கூறின.

மஹாராஷ்டிராவின் ஜெய்தாபூர், ஆந்திராவின் கோவடா, குஜராத்தின் விர்தி ஆகிய பகுதிகளில், அணு மின் திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (24)

R.Srinivasan - Theni,இந்தியா
22-டிச-201508:52:45 IST Report Abuse
R.Srinivasan உதய குமாருக்கு ஓய்வே கிடைக்காது போலிருக்கிறதே....
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-டிச-201508:29:25 IST Report Abuse
Srinivasan Kannaiya தமிழ் நாட்டுக்கு எவ்வளவு தருவீங்க...?
Rate this:
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
22-டிச-201506:53:04 IST Report Abuse
R KUMAR சந்தோஷம். கூடங்குளத்தில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அணுஉலைகள் முழுமையாக இயங்குகிறதா என்பதற்கே பதிலை காணோம். இன்னும் எத்தனை ஆண்டுகள் சோதனை என்ற அடிப்படையிலேயே அரசு பணம் வீணாக்கப்படப்போகிறதோ தெரியவில்லை? சம்பளத்தினையும் இதர வருமானங்களையும் மட்டுமே கருதும் திறமையற்ற விஞ்ஞானிகள், திட்டமிடப்படாத திட்டங்கள், டெண்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட தரமில்லாத ஊழல் கட்டுமானங்கள், என்றுமே மின்சாரம் உற்பத்தி செய்யவே செய்யாத இயந்திரங்கள் (போராட்டக்காரர்களின் வாதப்படி) இவையெல்லாம் எதில் போய் முடியுமோ? எவருக்கெல்லாம் பங்கு போயிருக்கிறதோ? எந்த அரசியல்வாதியின் லீலையோ? எந்த பெரிய நிறுவனத்தின் லாபியோ? திட்டத்தில் சம்பத்தப்பட்டவர்கள் மனசாட்சிப்படி இதற்குரிய விளக்கங்களை அளிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X