'உல்ப் 1061சி'! மனிதர்கள் வாழ புதிய கிரகம் தயார்
'உல்ப் 1061சி'! மனிதர்கள் வாழ புதிய கிரகம் தயார்

'உல்ப் 1061சி'! மனிதர்கள் வாழ புதிய கிரகம் தயார்

Updated : டிச 21, 2015 | Added : டிச 21, 2015 | கருத்துகள் (33) | |
Advertisement
மெல்போர்ன் : பூமியை போன்றே, மனிதர்கள் வாழ ஏற்ற சூழலில் 'உல்ப் 1061' எனும் புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பூமியிலிருந்து 14 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாவது: மனிதர்கள் வசிப்பதற்குத் தகுதியான கிரகங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டதில், பூமியை
Closest ever planet Wolf 1061c in habitable zone found just 14 light years away'உல்ப் 1061சி'! மனிதர்கள் வாழ புதிய கிரகம் தயார்

மெல்போர்ன் : பூமியை போன்றே, மனிதர்கள் வாழ ஏற்ற சூழலில் 'உல்ப் 1061' எனும் புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பூமியிலிருந்து 14 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாவது: மனிதர்கள் வசிப்பதற்குத் தகுதியான கிரகங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டதில், பூமியை ஒத்த சூழல் கொண்ட 3 கிரகங்களை கண்டறிப்பட்டன. ஒரு சிறு நட்சத்திரத்தை இம்மூன்று கிரகங்களும் சுற்றி வருகின்றன. நட்சத்திரத்திற்கு 'உல்ப் 1061' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது புவியிலிருந்து 14 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.


உல்ஃப் 1061சி : இம்மூன்று கிரகங்களின் நிலப்பரப்பும் பாறை போல கடினமாக இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. குறிப்பாக நடுவில் உள்ள கிரகத்தின் தன்மை, பூமியைப் போலவே உள்ளது. அந்த கிரகத்திற்கு 'உல்ப் 1061சி' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பூமியைவிட 4 மடங்கு பெரியதாக இருக்கும். இங்கு திரவ வடிவில் நீர் இருக்கவும் வாய்ப்புள்ளது.


மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ள கிரகங்கள் இதற்கு முன்பு கண்டறியப்பட்டாலும், அவை 'உல்ப் 1061' நட்சத்திரத்தைவிட இரு மடங்கு தொலைவில் உள்ளன.


ஒளியாண்டு : ஓராண்டில் ஒளி பயணிக்கும் தூரமே ஓர் ஒளியாண்டு(சுமார் 10 லட்சம் கோடி கி.மீ.,) ஆகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (33)

JeevaKiran - COONOOR,இந்தியா
22-டிச-201510:47:42 IST Report Abuse
JeevaKiran இந்த நவீன உலகத்தில் எல்லாமே சாத்தியம். ராமாயணத்தில், ராவணம் புஷ்பக விமானம் உபயோகப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. அது இன்று (விமான பயன்பாடு) சாத்தியமாகி உள்ளது.
Rate this:
Cancel
R.Srinivasan - Theni,இந்தியா
22-டிச-201508:44:23 IST Report Abuse
R.Srinivasan நம்மூரில் " கெரகம் புடிச்சவனுங்க" ரொம்பவே இருக்காங்க...அவனுங்களை இந்த புதிய கிரகத்துக்கு அனுப்பி வைக்கலாம்.....
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
22-டிச-201508:00:47 IST Report Abuse
நிலா போக முடியாத ஊருக்கு வழி செல்லுவது எல்லோரையும் கிறுக்கர்களாக மாற்றும் செயல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X