எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரூ.1,100 கோடி !
தமிழகத்தில் 1.49 கோடி பேருக்கு கிடைத்தது
காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தால் பலன்

சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.49 கோடி பேருக்கு 1,100 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

 தமிழகத்தில் 1.49 கோடி பேருக்கு கிடைத்தது ரூ.1,100 கோடி     காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தால் பலன்

தமிழகத்தில் பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு 1.60 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மத்திய அரசுஓட்டலில் வீட்டு சிலிண்டரை பயன்படுத்துதல், ஒருவரே பல காஸ் இணைப்பு வைத்திருத்தல்

போன்ற காரணங்களால் சிலிண்டர் வினியோகத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டது. இதையடுத்து 2015 ஜன., மாதம் சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை மத்தியஅரசு அறிமுகம் செய்தது. முன் வைப்பு தொகைஇத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் சந்தை விலையில் சிலிண்டர் வாங்க வேண்டும். அதற்கான மானிய தொகை அவரின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் இணையும் போது முன் வைப்பு தொகையாக 568 ரூபாய் வழங்கப்பட்டது. மானிய திட்டத்தில் டிச. 31 நிலவரப்படி 1.49 கோடி பேர் இணைந்துள்ளனர்.

இதுகுறித்துஎண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒவ்வொரு மாதமும் காஸ் சிலிண்டர் விலைக்கு ஏற்ப மானிய தொகை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் வங்கி கணக்கில் மானிய தொகை செலுத்தப்பட்ட விவரத்தை சம்பந்தப்பட்ட காஸ் ஏஜன்சி அல்லது வங்கியில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

புகார்மானிய தொகையை வழங்காதது தெரியவந்தால் உடனே எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் அளிக்கலாம். தமிழகத்தில் ஓராண்டில் மானிய தொகை மற்றும் முன் வைப்பு தொகை என 1,100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
02-ஜன-201601:12:43 IST Report Abuse

g.s,rajanஇதே மாதிரி பெட்ரோல் டீஸல் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தினால் அவங்களுக்கு ஒரு குறிப்பிட லிட்டருக்கும் மேல் மானியத்தைக் கட் பண்ணலாம் .மின் கட்டணம் வசூலிக்கப் ஸ்லாப் முறை வைத்து அதிக கட்டணங்கள் வசூலிப்பது போல் பெட்ரோல், டீஸல் போன்றவற்றிற்கு ஸ்லாப் முறை வைக்கவும் .இதனால் எவருமே இஷ்டப்படி பெட்ரோல் டீஸல் எரிபொருளை ஒரு போதும் வீணாக்க மாட்டாங்க . ஜி.எஸ்.ராஜன், சென்னை.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
01-ஜன-201608:53:09 IST Report Abuse

K.Sugavanamஅது அவங்க கட்டின வரிப்பணம் தானே...

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
01-ஜன-201607:53:09 IST Report Abuse

தங்கை ராஜாபாக்கெட்டிலிருந்து ரெண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு கையில் ஒரு ரூபாய் கொடுத்தல் அது தாராளமா.........

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X