புன்செய் புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி, கோவில்புதூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், எட்டாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் அதிகாலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின்னர் பாராயணம் நடந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்தி, பாமா ருக்மணி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் திருமண கோலத்தில் மண்டபத்துக்கு எழுந்தருளினார். பின் வேதமந்திர முழக்கத்தோடு, கல்யாண உற்சவம் துவங்கியது. பூஜை செய்து, பாமா ருக்மணிக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. மாலை வரை ஊஞ்சல் சேவையில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE