அதிகாரப் பசி கொண்ட கட்சி பா.ஜ., :கெஜ்ரிவால்
அதிகாரப் பசி கொண்ட கட்சி பா.ஜ., :கெஜ்ரிவால்

அதிகாரப் பசி கொண்ட கட்சி பா.ஜ., :கெஜ்ரிவால்

Added : மார் 20, 2016 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி : 'பா.ஜ., அதிகாரப்பசி கொண்ட கட்சி' என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.உத்திரகண்டில் காங்கிரஸ் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மேலும் பா.ஜ.,வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த மாநிலத்தில்
அதிகாரப் பசி கொண்ட கட்சி பா.ஜ., :கெஜ்ரிவால்

புதுடில்லி : 'பா.ஜ., அதிகாரப்பசி கொண்ட கட்சி' என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.



உத்திரகண்டில் காங்கிரஸ் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு எதிராக அக்கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மேலும் பா.ஜ.,வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் தனது கருத்தினை பதிவிட்டுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அருணாச்சலப் பிரதேசத்தில் நடத்தியதை போலவே, உத்திரகண்டிலும் பா.ஜ., தற்போது குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதிகாரப் பசி கொண்ட, அதிக ஊழல் நிறைந்த, தேச விரோத கட்சி என்பதை பா.ஜ., நிரூபித்துள்ளது என கடுமையாக சாடியுள்ளார்.


மேலும், பி.எப்., மீது விதிக்கப்பட்ட வரி, தங்க நகைகள் மீதான கலால் வரி விதிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்காக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை குறித்து கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால், 'மோடியை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்க வேண்டும் என அருண் ஜெட்லி முடிவு செய்திருப்பது போல் தெரிகிறது' என்று கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

M.Ashok Kumar - Chennai,இந்தியா
20-மார்-201616:36:59 IST Report Abuse
M.Ashok Kumar நேர்வழியில் தேர்தலை சந்திக்காமல் மறைமுகமாக பாஜக ஆட்சியை பிடிக்க முயற்சிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அருணாச்சல பிரதேசத்தில் இதே வழியை பாஜக பின்பற்றியது. ஜார்கண்டில் பாபுலால் மாரண்டி கட்சியில் இருந்து 6 எம்எல்ஏ க்களை பாஜகவில் சேர்த்து ஜார்கண்டில் ஆட்சி அமைத்தார்கள். பாஜக ஜனநாயகப்படி செயல்பட வேண்டும்.
Rate this:
Cancel
DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
20-மார்-201615:24:09 IST Report Abuse
DSM .S/o PLM அண்ணா ஹஜாரே விடமிருந்து பிரபலத்தை திருடிக்கொண்டு வந்து தேர்தலில் நிற்கும் வரை காங்கிரசைஎதிர்த்து.. பின்பு இப்போது பி ஜே பி ஆட்சிக்கு வந்ததும் மோடி யை எதிர்த்து எதற்கு என்றே தெரியாமல் கண்ணைய வை ஆதரித்து,, என்னமோ இவர் பதவி தேவை இல்லாமல் நாட்டிற்க்காக பனி செய்வது போல பேசுகிறார்.. டெல்லியின் விஜய் காந்த்.
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
20-மார்-201613:02:15 IST Report Abuse
Subburamu Krishnaswamy Convert the AAP as a social work organisation and don't contest elections to acquire power. .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X