திருப்பூர்: திருப்பூர் ஜம்மனை பள்ளம் பாலத்தை ஒட்டிய பகுதியில், கால்வாயில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.திருப்பூர் மங்கலம் ரோடு பகுதியை, பழைய பஸ் ஸ்டாண்டுடன் இணைக்கும் வகையில், ஜம்மனை பள்ளம் ஓடையில், தரைப்பாலம் இருந்தது; கடந்தாண்டு வெள்ளப்பெருக்கில், இப்பாலம் சேதமடைந்தது. மங்கலம் ரோட்டில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு, சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.அதனால், ஜம்மனை பள்ளம் ஓடை குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. ஓடையை ஒட்டி, தெற்கு தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே உள்ள கால்வாயை, மாநகராட்சி அதிகாரிகள், நேற்று தூர்வாரினர். கால்வாயில் தேங்கியிருந்த மணல், சிமென்ட், கான்கிரீட் கழிவு உள்ளிட்டவை, பொக்லைன் இயந்திரம் மூலம் எடுக்கப்பட்டன.அதிகாரிகளிடம் கேட்ட போது, "பாலத்தின் உறுதித்தன்மையை கருத்தில் கொண்டு, இவ்வளவு நாள் தூய்மைப்பணி மேற்கொள்ளவில்லை. தற்போது பாலம் பணி நிறைவடைந்ததால், கால்வாய் தூர்வாரப்படுகிறது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE