கால்நடைகளின் உயிர் காப்பான்: வாழும் மனித நேயம்

Added : ஏப் 01, 2016 | கருத்துகள் (4) | |
Advertisement
காரைக்குடி:ரோட்டில் அடிபட்டு கிடக்கும் கால்நடைகளை, காப்பாற்றி பராமரித்து வருகிறார் காரைக்குடி அருகே உள்ள புதுவயலை சேர்ந்த டெய்லர் மணி. உயிர்களை சமமாக மதிக்க வேண்டும், அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும், என பல மணி நேரம் போதிப்பவர் கூட, ரோட்டில் கால்நடை ஒன்று அடிபட்டு கிடந்தால், அய்யோ, என பரிதாபப்படுவார்களே ஒழிய, அதை மீட்டு அதற்கு மருத்துவ உதவி அளிக்க முன்வர
 கால்நடைகளின் உயிர் காப்பான்: வாழும் மனித நேயம்

காரைக்குடி:ரோட்டில் அடிபட்டு கிடக்கும் கால்நடைகளை, காப்பாற்றி பராமரித்து வருகிறார் காரைக்குடி அருகே உள்ள புதுவயலை சேர்ந்த டெய்லர் மணி.

உயிர்களை சமமாக மதிக்க வேண்டும், அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும், என பல மணி நேரம் போதிப்பவர் கூட, ரோட்டில் கால்நடை ஒன்று அடிபட்டு கிடந்தால், அய்யோ, என பரிதாபப்படுவார்களே ஒழிய, அதை மீட்டு அதற்கு மருத்துவ உதவி அளிக்க முன்வர மாட்டார்கள். ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக ரோட்டில் அடிபட்டு கிடக்கும் கால்நடைகளை, மீட்டு அவற்றுக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறார் புதுவயலை சேர்ந்த டெய்லர் மணி.

"தாய்மடி அனைத்து உயிர் காப்பகம்' என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். அனாதையாக விடப்பட்ட 26 நாய்கள், அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட 7-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. அவர் கூறும்போது:

பசுமாடு என்பது விவசாயத்துக்கு முக்கியமானது. இது இன்றி இயற்கை விவசாயம் செய்ய முடியாது. ஆனால்,பலர் நாட்டு மாடுகளை ரோட்டில் திரிய விடுகின்றனர். அவை வாகனங்களில் அடிபட்டு உயிரை இழக்கிறது. அவற்றை காப்பாற்ற கோசாலை இல்லை. எனவே, அவற்றின் உயிர் காக்கும் வகையில், அவற்றை மீட்டு மருத்துவர் மூலம் உரிய சிகிச்சை அளித்து வருகிறேன். அதே போல், அடிபடும் நாய்களையும் காப்பாற்றி காப்பக வசதி செய்து கொடுத்துள்ளேன்.

நாய்களை பராமரிக்க நாள் ஒன்றுக்கு ரூ.500 வரை செலவாகிறது. காலையில் 3 லிட்டர் பால், முட்டை, மதியம் பிஸ்கட், இரவு கோழி ஈரல் ஆகியவை வாங்கி கொடுக்கிறேன். நான் விவசாயம் செய்வதால் மாடுகளுக்கு தேவையான புல், தழை என் தோட்டத்திலேயே கிடைக்கிறது. நாய்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உள்ளது. முதல் முதலில் திருப்புவனத்தில் வாகனத்தில் அடிபட்ட நாய் என்னிடம் உள்ளது. அதற்கு தற்போது 16 வயதாகிறது.

தனி அறை, கட்டில் வசதி செய்து கொடுத்துள்ளேன். சமீபத்தில் ஆடு ஒன்று நாய்களால் கடிபட்டு, கொம்பு முறிந்து, உயிருக்கு போராடிய நிலையில், அதன் உரிமையாளர்கள் ரூ.500-க்கு கசாப்பு கடையில் விற்று விட்டனர். நான் அதை மீட்டு, தற்போது என்னால் முடிந்த சிகிச்சை அளித்து வருகிறேன். என்னிடம் 26 நாய்கள் இருந்தாலும், அவைகளுக்குள் சண்டை போடாது. ஒற்றுமையாக இருக்கும், என்றார்.

மனித நேயம் இன்னும் ஒரு சில இடங்களில் மலர்ந்து கொண்டு தான் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

kasinathan - utthiramarur  ( Posted via: Dinamalar Android App )
01-ஏப்-201616:38:37 IST Report Abuse
kasinathan எனதூர் உத்திரமேர் அனாதயாக விட பட்ட பெண் நாய் அதுவும் கால் ஒடைந்த நிலையில்,தான் அடைக்களம் கொடுத்தேன் இப்போழுது ஒன்பது குட்டிகள் ஈன்று உளளது .அதையும் பாதுகாத்து வருகிறேன்
Rate this:
Cancel
Gopinath - Bangalore - Bangalore,இந்தியா
01-ஏப்-201612:34:01 IST Report Abuse
Gopinath - Bangalore மனித உருவில் தெய்வம்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
01-ஏப்-201608:13:01 IST Report Abuse
Mani . V மனிதம் இன்னும் சாகவில்லை என்பதற்கு ஒரு உதாரணம் திரு. மணி அவர்கள். மல்லையா போன்றவர்கள் 9000 கோடி கடன் வாங்கி ஜல்சா பண்ணிவிட்டு வெளிநாடு தப்பி ஓடும் நிலையில் தன் குறைந்த வருமானத்தை வைத்து கால்நடைகளைப் பராமரிக்கும் இவர் உயர்ந்தவர். கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X