சென்னை தீவுத் திடலில் முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார்.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் அவர் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் ஏப்., 4ம் தேதி வெளியிடப்பட்டது. அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரத்தை துவக்குகிறார். தமிழகம் முழுவதும் 15 பொதுக்
கூட்டங்களில் பங்கேற்கும் அவர் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
சென்னை,
தீவுத்திடலில் இன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில்,
பெரம்பூர் கொளத்துார், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் (தனி), எழும்பூர்
(தனி),ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லுார், ஆலந்துார், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் என 20 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஓட்டு சேகரிக்க உள்ளார்.மேலும் இக்கூட்டத் தில் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
கலங்கடிக்கும் 'சென்டிமென்ட்': சென்னை தீவுத்திடலில்முதல்வர் பிரசாரத்தை துவக்குவது அ.தி.மு.க.,வினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி
உள்ளது.கடந்த 1996 சட்டசபை தேர்தல், 2009 லோக்சபா தேர்தல் ஆகியவற்றின்போது
ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை தீவுத்திடலில்
துவக்கினார். அந்த தேர்தல்களில் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது; தி.மு.க., வெற்றி பெற்றது.
அடுத்து 2011 சட்டசபை தேர்தலில், அதே இடத்தில், தி.மு.க., பொதுக் கூட்டம் நடத்தியது. அந்த தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. இங்கு பொதுக் கூட்டம் நடத்தினால், தோல்வி நிச்சயம் என்ற 'சென்டிமென்ட்' உள்ள நிலையில், 2016 தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா தீவுத்திடலில் துவக்குவது அக்கட்சியினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (76)
Reply
Reply
Reply