பதிவு செய்த நாள் :
டில்லி போக்குவரத்து கட்டுப்பாடு: விதி மீறிய
பா.ஜ., - எம்.பி.,க்கு ரூ. 2,000 அபராதம்

புதுடில்லி,:டில்லி ஆம் ஆத்மி அரசின் போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டம், நேற்று தான் முழு அளவில் அமலானது.

 டில்லி போக்குவரத்து கட்டுப்பாடு: விதி மீறிய பா.ஜ., - எம்.பி.,க்கு  ரூ. 2,000 அபராதம்

விதியை மீறிய பா.ஜ., - எம்.பி., விஜய் கோயலுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.உலகளவில், மாசு நிறைந்த நகரங்கள் பட்டியலில், டில்லியும் இடம் பிடித்துள்ளது. இதற்கு காரணம், அங்கு இயக்கப்படும், 90 லட்சம் வாகனங்கள் தான். காற்று மாசைக் கட்டுப்படுத்த, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, புதிய கட்டுப்பாடு திட்டத்தை அறிவித்தது. தனியார் வாகனங்களின் பதிவெண்ணின் கடைசி எண், ஒற்றைப்படையாக இருந்தால், அது, ஒற்றைப் படை தேதியில் மட்டுமே இயக்க வேண்டும்; இரட்டைப் படை பதிவெண் கொண்ட வாகனங்கள், இரட்டை படை தேதியில்

இயக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

விடுமுறைக்குப் பின்...


காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை அமலில் இருக்கும் இந்த கட்டுப்பாடு திட்டத்தின் முதல் கட்டம், 2016 ஜனவரியில், 15 நாட்கள் அமலில்இருந்தது.
இரண்டாம் கட்டம், ஏப்., 15ல் துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின், நேற்று, இந்த திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தது. இதன் காரணமாக, மக்கள் பொது போக்குவரத்து வாகனங்களை நாடினர். சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.

சிக்கிய எம்.பி.,


'இந்த கட்டுப்பாடு விதிகளை மீறுவேன்' என, ஏற்கனவே அறிவித்திருந்தார், பா.ஜ., ராஜ்யசபா எம்.பி., விஜய் கோயல். டில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கோபால் ராய், அவரது இல்லத்துக்குச் சென்று, விதிகளை மீறுவதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதையும் மீறி,நேற்று, அவர், இரட்டைப் படை தேதியான, 18ல், தன், ஒற்றைப் படை எண் உடைய வாகனத்தில் பார்லிமென்ட் நோக்கி பயணித்தார். அப்போது, ராய்சினா சாலையில் போலீசார் அவரைப் பிடித்து, 2,000 ரூபாய் அபராதம்

Advertisement

விதித்தனர். அதேபோல, ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனத்துக்கான காப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் பயணித்ததற்காக, 1,500 ரூபாயும் அபராதம் விதித்தனர்.

மந்திரி காரில் முதல்வர்

அரசின் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கோபால் ராய் வாகனத்தில், அலுவலகம் வந்தார்.
மெட்ரோ ரயில் கூடுதல் நடைகளுக்கு இயக்கப்பட்டன. விதிகளை அமல்படுத்தவும், மீறுபவர்களை பிடிக்கவும், 2,000 போக்குவரத்து போலீசாரும், 210 குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த இரு நாட்களில், 2,300 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
19-ஏப்-201620:10:34 IST Report Abuse

 N.Purushothamanடெல்லியில் நிகில் என்கிற 23 வயது இளைஞர் HYBRID CONVERSION KIT ஐ தயாரித்து உள்ளார். இதை அணைத்து இலகு ரக வாகனங்களுக்கும் பயன்படுத்தினால் டெல்லியில் வாகனங்களால் ஏற்படும் மாசில் மிகப்பெரிய மாற்றம் ஏற்ப்படும்...கேஜ்ரி இதை பரிசீலிக்கக வேண்டும்...

Rate this:
19-ஏப்-201614:27:35 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்ஒழுங்கா திட்டமிட்டு, விழிப்புணர்வு கொண்டு வந்து, பொது போக்குவரத்தை அதிகரித்து செய்ய வேண்டியதை, ஒற்றை இரட்டை என்று முட்டாள்தனமான விளையாட்டு இது. LKG படிக்கும் குழந்தை சொன்ன திட்டமாக இருக்கும் இது.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஏப்-201621:19:32 IST Report Abuse

Pugazh V@சென்னி ஜெயராமன் - கிணற்றுத் தவளையாக இருக்க வேண்டாமே, சிங்கப்பூர், லாஸ் ஏஞ்செல்ஸ், மலேஷியா, சிட்னி , போன்ற நகரங்களில் இந்த ஒற்றை இரட்டை இலக்க வாகனக் கட்டுப்பாடு இருக்கிற சில நகரங்கள். மேலும் சில இருக்கலாம், இவை நான் நேரில் பார்த்த நகரங்கள். தெரியலன்னா பேசாம இருக்கணும், கேஜ்ரிவாலை திட்டவும் பி ஜே பி க்கு காவடி தூக்கவும் உங்களை முட்டாள் என்று அறிவித்துக் கொள்ளக் கூடாது. வாயத் தொறந்து மடத்தனத்தைப் பறை சாற்றக் கூடாது சார். பொது அறிவை வளர்க்க இணையதளம் இருக்கவே இருக்கிறதே. ...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஏப்-201621:30:36 IST Report Abuse

Pugazh Vஆரூர் ரங் என்கிற அறிவிலி வேறு. பெட்ரோல் விலையை 120 ஆக்கணுமாம். இந்த மாதிரி ஆசாமிகளும் இங்கே எழுதுகிறார்கள் எனும் போது வெக்கமா இருக்கு. ...

Rate this:
19-ஏப்-201614:25:07 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்கண்டவனெல்லாம் புத்தி சொல்வான்னு சொன்னா கேட்டாதானே, இப்ப பாரு AAP மந்திரி சொல்லிடாரில்ல.

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X