அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க.,வுடன் ஒப்பிட்டு பார்த்து ஓட்டளியுங்கள்!
காஞ்சிபுரத்தில் முதல்வர் ஜெ., ஓட்டு சேகரிப்பு

காஞ்சிபுரம்: ''தமிழக மக்களே, தி.மு.க., ஆட்சியையும், என் ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து, வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும்,'' என, வாரணவாசியில் நடைபெற்ற, அ.தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பேசினார்.

ஒப்பிட்டு, பார்த்து, ஓட்டளியுங்கள்!


அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வாரணவாசியில் நடைபெற்ற கூட்டத்தில், ஜெயலலிதா பேசியதாவது: கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, 'குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும்; மக்களாட்சி மலர வேண்டும்' என, அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்தினீர்கள். நான் ஆட்சி பொறுப்பில் வந்தவுடன், என்னென்ன வாக்குறுதிகளை தந்தேனோ, அவைகளை நிறைவேற்றியுள்ளேன்.
நான் சொன்னதை செய்வேன்; சொல்லாததையும் செய்துள்ளேன். இந்த சாதனைகளை பொறுக்க முடியாமல், கருணாநிதி மற்றும் தி.மு.க., வினர்,

90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நான் நிறைவேற்றவில்லை என, பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் மின்வெட்டு உள்ளது என, தி.மு.க.,வினர் பொய் பிரசாரம் செய்கின்றனர்; வாய்க்கு வந்ததை சொல்லி, மக்களை ஏமாற்றலாம் என, நினைக்கின்றனர்.கடந்த, தி.மு.க., ஆட்சியை எண்ணிப் பார்த்தால், யார் மக்களுக்காக உழைக்கின்றனர்;யார் தன் மக்களுக்காக உழைத்தனர் என்பது தெரியும். முந்தைய ஆட்சியில், அரசு, 'கேபிள் டிவி' முடக்கப்பட்டதற்கு, கருணாநிதி குடும்ப சண்டை தானே காரணம்!

தி.மு.க., பொய் பிரசாரம்


தமிழக மக்களுக்காக, கருணாநிதி செய்த பணிகள், இன படுகொலை, கச்சத்தீவு தாரைவார்ப்பு, முல்லை பெரியாறு பிரச்னையில் தடுமாற்றத்துடன் நடந்தது, நில அபகரிப்பு, திரைப்பட துறை கபளீகரம், தமிழகம் இருளில் மூழ்கியது என, அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழக மக்களே, தி.மு.க., ஆட்சியையும், என் ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.பெரு வௌ்ளத்தின் போது, என் அரசு செயல்பட்ட விதத்திற்கு, மத்திய குழு நற்சான்று அளித்துள்ளது. ஆனால், தி.மு.க., பொய் பிரசாரம் செய்து, ஆட்சியை பிடிக்கலாம் என பகல் கனவு காண்கிறது.


கருணாநிதிக்கு அருகதை கிடையாது.

மது விலக்கு பற்றி பேச, தி.மு.க., மற்றும்

Advertisement

கருணாநிதிக்கு அருகதை கிடையாது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், மது விலக்குக்கு சட்டம் இயற்றப்படும் என்றும், 'டாஸ்மாக்' விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கு என்பது மறந்து விட்டதா? முதல் கையெழுத்து ஏன் போட முன்வரவில்லை?
என் தலைமையிலான, அ.தி.மு.க., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்தவுடன். பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்.
டாஸ்மாக் கடைகள் நேரம் குறைக்கப்படும்; பார்கள் மூடப்படும்; போதை மீட்பு நிலையம் அமைக்கப்படும்.

இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு, பூரண மதுவிலக்கு என்பதை அடைவோம்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
வாரணவாசி கூட்டத்திற்கு, சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் வந்த ஜெயலலிதா, திரும்பிச் செல்லும் போது, சாலை வழியே சென்றார்.


Advertisement

வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஏப்-201621:09:14 IST Report Abuse

ந.செல்வசேகரன்சந்தோஷ் அவர்களே விலைவாசியைப் பற்றி பேசுகின்றீர்கள்!அரசு கட்டுக்குள் கொண்டுவருவதற்க்கு முயற்ச்சிகள் செய்தாலும். வியாபாரிகள் அதுதான் மக்கள் எங்கே திருந்துகின்றீர்கள்,சீனி விலை அதுவும் கிலோ 2ரூபாய் கூடினால் காப்பி. டீயை இரண்டு ரூபாய் கூட்டுகின்றீர்கள்!அதே விலை 4குறைந்தால் விலையை குறைக்கின்றீர்களா? அதே நிலைமை அரிசி கூடினால் ஒட்டலில் சாப்பாடு, காய்கறி கூடினால் ஒட்டலில் ஆகாததை கூட்டாக போடுவது. எல்லா விலையும் குறையனும். ஆனால் நாம்.ஊற்பத்தியாளர்கள் லாபம் பார்க்க வேண்டும்! உற்பத்தியாளர்கள்,வியாபாரிகள், திருந்தவேண்டும், திட்டம்போட்டு திருடுர கூட்டம் திருடிக்கொண்டேயிருக்குது அதை சட்டம் போட்டு தடுக்கின்றகூட்டம் தடுத்துக் கொண்டேயிருக்கின்றது திருடனாக பார்த்து (உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள்) திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது!ஆயிரம் பேசலாம்,எழுதலாம் ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராது!

Rate this:
Santosh Swamy - Chennai,இந்தியா
19-ஏப்-201618:38:21 IST Report Abuse

Santosh Swamyஇன்றிலிருந்து சரியாக ஐந்து வருடங்கள் முன்பாக...அதாவது 2011 ஜனவரியில்.... இதே தமிழகத்தில்....1 லிட்டர் பால் விலை ரூ 16/- (இன்றைக்கு 46/-)1 கிலோ பருப்பு ரூ 68/- (இன்றைக்கு 180/-)பேருந்து கட்டணம் ரூ 10/- (இன்றைக்கு 23/-)மின்சார கட்டணம் ரூ 500/- (இன்றைக்கு 1400/-)புது வாட் வரியால்..மாத சாமான்கள் ரூ. 2000/- (இன்றைக்கு 2800)மணல் 1லோடு ரூ 3500/- (இன்றைக்கு 7200/-)5 பேர் உள்ள குடும்பத்தின் மாத பட்ஜெட்...ரூ 6000/- (இன்றைக்கு 14000/- )தமிழக கடன் 98ஆயிரம் கோடி (இன்றைக்கு 2 லட்சத்தி பத்தாயிரம் கோடி)சிந்திப்பீர்....சுறுக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு குடும்பத்தின் மாதச் செலவும் 120 சதவிகிதம் அதாவது ஒரு மடங்குக்கும் அதிகமாக கூடியுள்ளது....அதே சமயம் தமிழகத்தின் கடன் சுமையும் இரு மடங்காகியுள்ளது..இத்தனைக்கும் சாலைகள், பாலங்கள், மெட்ரோ ரயில் போன்றவைகள், கூட்டுக் குடிநீர் திட்டங்கள், கடல் நீர் குடிநீராக்கும் திட்டங்கள், புது மின் உற்பத்தி திட்டங்கள், நதி நீர் இணைப்புத் திட்டங்கள், புதிய தொழிற் பேட்டைகள்.... என்று எதுவுமே இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் உருவாக்கப்படவேயில்லை...விலை வாசியும் மக்கள் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது..., புதுத் திட்டங்களும் இல்லை... ஆனாலும் கடனும் அதற்கான கூடுதல் வட்டியும் மட்டும் இரு மடங்காகியிருக்கிறது...இதற்கு எது காரணம்? யார் காரணம்?விலைவாசி குறையும் என்று தானே வாக்களித்தோம்...?உட்கட்டமைப்புவசதிகள் இன்னும் அதிகமாக மேம்படுத்தப்படும் என்று தானே வாக்களித்தோம்...?சாலைகளின் தரம் இன்னும் மேம்படுத்தப்படும் என்று தானே நம்பி வாக்களித்தோம்...?தமிழக கடன் குறையும் என்று தானே வாக்களித்தோம்..?தொழில் வாய்ப்புக்களும், புதுப்புது வேலைகளும் இன்னும் கூடுதலாக கிடைக்கும் என்று நம்பித்தானே வாக்களித்தோம்...?செயின் திருட்டு பல மடங்கு அதிகரித்திருக்கிறது, வன்முறை கலவரங்கள் வெடித்திருக்கின்றன, ஜாதிக் கலவரங்கள் உச்சம் தொட்டிருக்கின்றன, ஜாதிச் சண்டைகளால் கொலைகள் பல அரங்கேறியிருக்கின்றன, அனைத்து துறையிலுல் லஞ்சம் பெருக்கெடுத்து ஓடுகிறது,கூடங்குளம் தடுத்து நிறுத்தப்பட்டதா? தனி ஈழம் மலர்ந்ததா? கடைசியாக... ஜல்லிக்கட்டு நடந்ததா? காவிரியில் தண்ணீர் வந்ததா?வழக்கமான கொத்துச் சாவுகள்... குறிப்பாக செம்பரம்பாக்கச்சாவுகள் தான் நடந்தேறியிருக்கின்றன....சிந்தியுங்கள் தமிழக வாக்காளர்களே....ஐந்து வருடத்திற்கு முந்திய நமது வாழ்க்கைத் தரம் அந்த நிலையில் இருந்து முன்னேறி கூட இருக்க வேண்டாம்... ஏன்? அதே நிலையிலேயே தொடர்ந்து கூட இருக்க வேண்டாம்....ஆனால் ஐந்தாண்டுகள் பின் தங்கிப் போயிருக்கின்றோமே... இதை நீங்கள் உணர்கின்றீர்கள்தானே?கடந்த தேர்த லில் வாக்களிக்க நீங்கள் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த காரணங்கள் ஒவ்வொன்றையும் சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்...இனி நீங்கள் போடும் ஓட்டுக்கு ஒரு நியாயமான மரியாதைஇருக்க வேண்டும்....மிக நன்று

Rate this:
sankar - trichy,இந்தியா
19-ஏப்-201620:55:57 IST Report Abuse

sankar5 வருஷம் முன்னாடி உன் சம்பளம் எவ்வளவு இப்போ எவ்வளவு ? ...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
19-ஏப்-201617:06:15 IST Report Abuse

Endrum Indianஇது இப்படி இருக்கின்றது. "அவரை பாருங்கள் வெளியில் தெரிகின்றது அவரது குஷ்டம், எவ்வளுவு அசிங்கம், ஆனால் எனக்கு வெறும் HIV தான்" ஆகவே ஒப்பிட்டு பார்த்து யார் சிறந்தவர் என்று சொல்லுங்கள்"

Rate this:
மேலும் 74 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X