பதிவு செய்த நாள் :
50 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி
சென்றுள்ளது : ஸ்டாலின் பேச்சு

வாழப்பாடி: ''ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தமிழகம், 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது,'' என, வாழப்பாடியில் நடந்த பிரசார கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.சேலம் மாவட்டம், வாழப்பாடியில், ஏற்காடு தி.மு.க., வேட்பாளர் தமிழ்செல்வனை ஆதரித்து, ஸ்டாலின் பேசியதாவது:

 50 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி,: ஸ்டாலின்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது;

பெண் போலீசாருக்கும் பாதுகாப்பில்லை. ஜெ., ஆட்சியில் நிர்வாகம் சீரழிந்து விட்டது. முதல்வரை காணொலி காட்சியில் மட்டுமே காண முடிந்தது. 2011 தேர்தலுக்கு பின், ஜெயலலிதாமக்களை சந்திக்க வரவில்லை.ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால ஆட்சியில், தமிழகம், 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. அந்த பின்னடைவை சீரமைக்கவே, கடந்த மாதம், 10ம் தேதி, தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
தமிழகத்தில் மதுவிலக்கு அமல், கல்விக்கடன் ரத்து, விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம், கரும்பு டன்னுக்கு, 3,500 ரூபாய் என்பனஉட்பட, 501 அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.தமிழ் பண்பாட்டை, கலாசாரத்தை சீரழிக்கிற ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

*பாட்டு பாடி அசத்தல்

முதல்வர் ஜெயலலிதா பற்றி பேசும் போது, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த

Advertisement

புலவர் பெருமானே... என்ற பாடலையும், கெட்டிக்காரி... தக்குமிக்கு திக்குதாளம்.. என்ற பாடலையும், மாடி மேல மாடி கட்டி... கோடி கோடி சேர்த்து வைத்த கோமானே... என்ற மூன்று பாடல்களை பாடினார்


Advertisement

வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
03-மே-201622:27:39 IST Report Abuse

adalarasanகடந்த 50 ஆண்டுகளில் பெருபாலும், 32 ஆண்டுகள், கனம் பொருந்திய உங்கள் தந்தைதான் ஆண்டு இருக்கிறார் என்பதை, அறிந்தும், உமையை பேசியதற்கு ம்னன்ரி இதைதான் மற்ற கட்சிகள் கூறுகின்றன?

Rate this:
Manithan - Tirupur,இந்தியா
03-மே-201619:13:51 IST Report Abuse

Manithanசின்ன தாத்தா, உங்க ஆயிசு முடியிற வரைக்கும் முதல்வர் பதவிக்கு நீங்க வர முடியாது..

Rate this:
Nandakumar - chennai,இந்தியா
03-மே-201616:14:36 IST Report Abuse

Nandakumarஅந்நிய முதலீடுகளை ஈர்பதில் தமிழகம் 3ம் இடம் வகிக்கிறது. இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது.தமிழகத்தில், 67 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டுடன், 11 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், 60 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. சென்னை அருகே 2 செல்போன் தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. லெனோவா’ மற்றும் ‘மோட்டோரோலோ’ ஆகிய 2 செல்போன் தொழிற்சாலைகளும் தனித்தனி உற்பத்தி கோடுகளுடன் ஒரே மாதிரியான வசதிகளை பெற்றிருக்கும். குறிப்பாக சீனாவை சேர்ந்த கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் நிறுவனமான ‘லெனோவா’ சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நவீன வசதிகள் உடைய ‘ஸ்மார்ட் போன்கள்’ (செல்போன்கள்) தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Rate this:
மேலும் 75 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X