அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விஜயகாந்தை கண்டுகொள்ளாத வேட்பாளர்கள்:
உளுந்தூர்பேட்டை தொகுதியில் வினோதம்

உளுந்துார்பேட்டை தொகுதியின் அ.தி.மு.க.,- -- தி.மு.க., வேட்பாளர்கள் விஜயகாந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.

 விஜயகாந்தை கண்டுகொள்ளாத வேட்பாளர்கள்: உளுந்தூர்பேட்டை தொகுதியில் வினோதம்

விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தொகுதியில் தே.மு.தி.க., - -ம.ந.கூ., முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., சார்பில், தற்போதைய எம்.எல்.ஏ.,

குமரகுரு, தி.மு.க., சார்பில் வசந்தவேல் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.தொகுதியில் தனக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால்,விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வரும் 7ம் தேதி முதல், 14ம் தேதி வரை பிரசாரம் செய்ய விஜயகாந்த் முடிவு செய்திருந்தார்.
ஆனால், தொகுதியில் இருந்து வரும் தகவல்கள் சாதகமாக இல்லாத காரணத்தால், நேற்று முன்தினம், தொகுதியில் தன் பிரசாரத்தை துவங்கி விட்டு, விஜயகாந்த் சென்றார்.தொகுதியில் பா.ம.க., வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் பாலு மட்டும் விஜயகாந்தை எதிர்த்து பிரசாரம் செய்கிறார்.

ஆனால், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வேட்பாளர்கள் விஜயகாந்தை கண்டு கொள்வதில்லை; விமர்சிப்பது கிடையாது. விஜய காந்தை, அ.தி.மு.க.,- - தி.மு.க.,

Advertisement

வேட்பாளர்கள் போட்டியாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இது, தே.மு.தி.க., வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

-- நமது சிறப்பு நிருபர் --

Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
L.N.Ramesh - madurai,இந்தியா
04-மே-201619:17:12 IST Report Abuse

L.N.Rameshசட்ட சபையில் ஏன் பால் விலை ,பஸ் கட்டணம் மின்சாரக் கட்டணம் இவைகளை எல்லாம் உயர்த்துகிறீர்கள் என்று கேட்டு மக்களுக்காக குரல் கொடுத்து வெளியில் வந்தவர் விஜயகாந்த்.2014 லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டு வைத்து அவர்களுக்காகவும் பகல் இரவு என்று சுற்றி பிரச்சாரம் செய்தவர்.ஆனால் பிரதமர் மோடி இங்கு வந்தபோது ரஜனியை (எப்போ வருவேன் எப்பிடி வருவேன் என்று வசனம் மட்டுமே பேசத்தெரிந்தவர் ) போய் பார்க்கிறார் ,ஜெயலலிதாவை (தேர்தலில் எதிர்த்து நின்றவர் )தேடி போய் பார்க்கிறார்.,விஜயகாந்த்தை பார்க்கத் தெரியவில்லை.ஆகையால் தான் பணம் தருகிறேன் என்றவரிடமும் சேராமல் ,மதிக்கதெரியாத்தவரிடமும் சேராமல் புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்று எந்த நிலையிலும் சோரம் போகாமல் சந்தர்பவாதியாக இல்லாமல் விஜயகாந்த் மதிக்கிரவர்களிடம் கூட்டு வைத்துள்ளார்.இவரை போன்றவர் தான் இன்றைய சூழலில் தேவை. அவரின் கோபம் திருத்திக் கொள்ளலாம் .ஊழல் காரர்களை திருத்த முடியாது.இப்பொழுது மாற்றம் இல்லை என்றால் திமுக அதிமுக இருவரில் ஒருவர் வந்தாலும் இனி எந்த ஒரு மனிதனையோ .கட்சியையோ கண்டிப்பாக முளைக்க விடமாட்டார்கள்.தனியாக விஜயகாந்த் இதுநாள் வரை போராடி வருகிறார்.கண்டிப்பாக மாற்றம் வேண்டும்.திமுக அதிமுக இருவரும் மக்களின் வரிப்பணத்தை கொள்ளியாடித்ததுவும் இல்லாமல் 5 லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறார்கள்.ஊரன் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்று மக்களின் வரிப்பணத்தை தவறுதலாக செலவு செய்திருக்கிறார்கள்.தி மு க,அதிமுக இருவரும் சில நல்ல திட்டங்களை கொண்டுவந்தாலும் அவை அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைக்கவில்லை.5 வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் வருவதே ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலத்திட்டங்களை இவர்கள் 5 வருடத்தில் செய்து முடிக்கவேண்டும் என்றுதான்.திமுக ,அதிமுக ,இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் மேல் உள்ள ஊழல் வழக்குகளை சரிசெய்யவும் ,அதில் இருந்து மீள பணம் கொள்ளை அடிக்கவும் தான் நேரம் சரியாக உள்ளது மக்களை பற்றி கவலை பட நேரம் இல்லை.புதிய நல்ல மனிதர்களை தேர்வு செய்தால்( எப்படி அலுவலகத்தில் ஆட்களை புதிதாக மாற்றி பழைய நிர்வாகத்தில் இருந்த குறைகளை சரிசெய்வதுபோல் ) பழைய ஆட்சியில் மக்களுக்காக கொண்டுவந்த திட்டங்களில் குறைகளை சரிசெய்து மக்களை நல்லமுறையில் சென்று அடையவும்,புதிதாக வேறு பல நல்லதிட்டங்களை கொண்டு வந்து 5 ஆண்டுகளில் செயல்படுத்த முடியும்.இந்த புதிய 5 ஆண்டில் இவர்களிடம் குறை இருந்தால் அதை சரிசெய்ய புதிதாக இன்னும் நல்லமனிதர்கள் வளர்ந்து வர சந்தர்பம் கிடைக்கும்.திமுக, அதிமுக வந்தால் புதிதாக ஒருவரையும் வளரவிடமாட்டர்கள் என்பது கட்டாயம் உறுதி.

Rate this:
KRISHNAKUMAR - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-மே-201618:23:24 IST Report Abuse

KRISHNAKUMARஇப்போ விஜயகாந்த் உணருவார் தான் ஒரு கத்து குட்டி என்று. கொள்ளை அடிப்பதில் மட்டும் முதன்மை இல்ல DMK & ADMK. மூன்றாவது கட்சிய வளர விடாமல் கெடுப்பதிலும் நம்பர் 1. இதுல இரண்டு கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

Rate this:
gifty arul - Chennai,இந்தியா
04-மே-201616:24:20 IST Report Abuse

gifty arulகுட் dmk win

Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X