ஜெ.,வின் மதுவிலக்கு அறிவிப்பு கபட நாடகம்: கருணாநிதி
ஜெ.,வின் மதுவிலக்கு அறிவிப்பு கபட நாடகம்: கருணாநிதி

ஜெ.,வின் மதுவிலக்கு அறிவிப்பு கபட நாடகம்: கருணாநிதி

Added : மே 07, 2016 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில், மணலி மற்றும் மதுரவாயலில், 'டாஸ்மாக்'கை மூடக்கோரி போராட்டம் நடத்திய பெண்கள், சிறுவர்கள் மீது, காவல் துறையினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். போராட்டம் நடத்திய பெண்களை, காவல் துறையினர் தரதரவென்று இழுத்துச் செல்வதையும், பூட்ஸ் கால்களால் எட்டி உதைப்பதையும், ரத்தம் சொட்டச் சொட்ட
 ஜெ.,வின் மதுவிலக்கு அறிவிப்பு கபட நாடகம்: கருணாநிதி

சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில், மணலி மற்றும் மதுரவாயலில், 'டாஸ்மாக்'கை மூடக்கோரி போராட்டம் நடத்திய பெண்கள், சிறுவர்கள் மீது, காவல் துறையினர் கொலை வெறித் தாக்குதல்
நடத்தியுள்ளனர். போராட்டம் நடத்திய பெண்களை, காவல் துறையினர் தரதரவென்று இழுத்துச் செல்வதையும், பூட்ஸ்
கால்களால் எட்டி உதைப்பதையும், ரத்தம் சொட்டச் சொட்ட பெண்கள் தாக்கப்படுவதையும் கண்ட யாரும், இந்த ஆட்சியினரை கண்டிக்காமல் இருக்க முடியாது. இந்த வன்முறை சம்பவத்தில், 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து
உள்ளனர்; 10 பெண்களின் மண்டை உடைந்துள்ளது. மதுவிலக்கு கொள்கைக்காக போராடு பவர்களை, கடுமையாக தாக்கிய நிலையில், ஜெய
லலிதா தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்துவேன் என அறிவித்திருப்பது, மக்களை ஏமாற்றும் மற்றும் ஒரு கபட நாடகம் என்பது, திட்ட
வட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டாஸ்மாக்கை மூடக்கோரி, இரண்டு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, கண்மூடித்தனமாக தாக்கிய காவல் துறையினரையும், காவல் துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவையும், வன்மையாக
கண்டிப்பதோடு, காவல் துறையினர் அராஜகத்தை, இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

a natanasabapathy - vadalur,இந்தியா
07-மே-201608:56:19 IST Report Abuse
a natanasabapathy நீர் சொல்லுவதும் நாடகமே. உமக்கு தில் இருந்தால் உடனடியாக தி மு ka காரன் நடத்தும் மது ஆலைகளை மூட சொல்லவும் அதை செய்யாதவரை மக்கள் உம்மை நம்ப மாட்டார்கள்.
Rate this:
Cancel
Tamil Selvan - Chennai,இந்தியா
07-மே-201608:01:18 IST Report Abuse
Tamil Selvan அதுசரி, உங்க 3 மணி நேர உண்ணா விரத நாடகத்தை விடவா இது பெரிய கபட நாடகம்???....
Rate this:
Cancel
SEETHARAMAN - chennai,இந்தியா
07-மே-201607:06:25 IST Report Abuse
SEETHARAMAN '' மதுவிலக்கு '' பற்றிப் பேச திமுகவிற்குத் தகுதி இல்லை - என்கிறார் ஜெ.'' இல்லை, எங்களுக்குத் தகுதி வந்துவிட்டது '' என்பதை திமுக இதுவரை விளக்கவில்லையே '' நாங்கள் ( அப்போது கட்சியிலிருந்த ) எம்ஜிஆர் சொல்லித்தான் மதுவிலக்கை ரத்து செய்தோம் '' என்று திமுக ஒரு அண்டப்புளுகை அவிழ்த்துவிட வேண்டியதுதானே ? திமுக எத்தனையோ பொய்யுரைகளை சிறிதும் கூச்சப்படாமல் அடுக்கிக்கொண்டே போகையில், இன்னொரு பொய்யையும் சேர்த்துச் சொன்னால் என்ன கெட்டுவிடப் போகிறது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X