அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சமஸ்கிருதத்தை எதிர்த்து கிளர்ச்சி:
கருணாநிதி எச்சரிக்கை

சென்னை: ''இந்தியை எதிர்த்து, கிளம்பிய கிளர்ச்சியை போல, சமஸ்கிருதத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி, தமிழகத்தில் உருவாகுவதற்கு யாரும் காரணமாகி விடக் கூடாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.

சமஸ்கிருதத்தை  ஓட, ஓட விரட்டுவோம்

முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா இல்ல திருமண விழாவில், கருணாநிதி பேசியதாவது:மீண்டும் தமிழகத்தில், சமஸ்கிருதம் தலைதுாக்குமா, வடமொழி நம் மீது

படையெடுக்குமா என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.
துாய தமிழ் மொழிக்கு தான் செல்வாக்கு, துாயத் தமிழ் மொழி தான் நம் வாழ்க்கையிலேஇருக்க வேண்டும். வடமொழி, ஆளுங்கட்சி மூலமாக அல்லது ஆளுங்கட்சியினரின் ஆதரவோடு, ஆசியோடு நுழைவதற்கு இடம், நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே, வடமொழியை திணிக்க விரும்புகிற மக்கள், தங்களை பாதுகாத்து கொள்ள, தங்களுடைய மொழியைப் பரப்ப விரும்புகின்ற, இந்த அநியாயத்தை இப்போதே நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இல்லாவிட்டால், வடமொழியை எதிர்த்து, சமஸ்கிருதத்தை எதிர்த்து, ஒரு பெரும் கிளர்ச்சி, எப்படி கட்டாய இந்தியை எதிர்த்து, தமிழகத்தில் உருவாயிற்றோ, அதைப் போல வடமொழி சமஸ்கிருதத்தை எதிர்த்து, ஒரு கிளர்ச்சி, தமிழகத்தில் உருவாவதற்கு யாரும்

Advertisement

காரணமாகி விடக்கூடாது.
தமிழகத்தில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும், அதை ஓட, ஓட விரட்டுவோம் என்ற அந்த உறுதியை, இந்த மண விழாவிலே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.



Advertisement

வாசகர் கருத்து (287)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
17-ஜூன்-201616:13:42 IST Report Abuse

Barathanகருணா நிதி என்பது தமிழ் சொல் அல்ல

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஜூன்-201613:31:59 IST Report Abuse

Malick Rajaதக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தார் காணப்படும்.. என்பதை வந்தேறிகள் கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்தி இருப்பது தெளிவாகிவிட்டது..

Rate this:
Kalyan Sudharsanam - madurai,இந்தியா
14-ஜூன்-201623:55:21 IST Report Abuse

Kalyan Sudharsanamமுதலில் மஞ்சள் துண்டை நீக்கட்டும் பெயரை அருள் செல்வம் என்று மாற்றட்டும் ஸ்டாலின் பெயருக்கு தமிழ் பெயர் வைக்கட்டும் தயாளு பெயரை அருளாழி என்றும் ராஜாத்தி பெயரை அரசனி அரசி என்று மாற்றட்டும். இதே போல் அழகு மலை விடியல் செல்வம் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் பெயரை தமிழ் படுத்தட்டும் பின்னல் சமஸ்க்ரிதம் ஓட ஓட விரட்டுவோம். எங்கள் பிள்ளைகள் பேரன்கள் அங்கிலம் ஹிந்தி படிப்பார்கள் யாரும் கேட்ககூடாது. ஆனால் தமிழர்கள் தமிழ் மட்டும் படித்து அடிமை சந்தையில் வீழட்டும். தமிழ் மாணவர்களே நமது தமிழ் ஈழ மக்கள் மடிவதை வேடிக்கை பார்த்த உண்ணா விரத டிராமா செய்த தலைவர் சொல்வதை கேட்டு இன்னும் கேவலப்படதீர்கள். இவர்கள் திராவிடர்களை முன்னேற்ற பாடுபட்டார்கள் முல்லை பெரியார் (கேரளாவுக்க) காவிரி (கர்நாடகவுக்கு) விட்டுக்கொடுத்தார்கள். ஆனால் தமிழ் நாட்டில் தண்ணீர் கிடைப்பதை தடுப்பார்கள். ஏனென்றால் இது திராவிட முன்னேற்ற கழகம் ஆனால் தமிழ் முன்னேற்ற கழகம் இல்லை இன்னுமா தமிழர்கள் இவர்களை நம்புகிறீர்கள்

Rate this:
மேலும் 284 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X