'டியர்'னு சொல்லாதீங்க...: ஸ்மிருதி இரானி கண்டிப்பு

Added : ஜூன் 14, 2016 | கருத்துகள் (33) | |
Advertisement
பாட்னா: பீஹார் மாநில கல்வித் துறை அமைச் சர் அசோக் சவுத்ரி, 'டியர்' என விளித்து, 'டுவிட்டரில்' எழுதியதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எதிர்ப்பு தெரிவித்த தால், சலசலப்பு எழுந்தது. பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். கூட்டணி ஆட்சி நடக்கும் இம்மாநில கல்வித் துறை அமைச்சராக, காங்கிரசைச் சேர்ந்த, அசோக் சவுத்ரி
 'டியர்'னு சொல்லாதீங்க...: ஸ்மிருதி இரானி கண்டிப்பு



பாட்னா: பீஹார் மாநில கல்வித் துறை அமைச் சர் அசோக் சவுத்ரி, 'டியர்' என விளித்து, 'டுவிட்டரில்' எழுதியதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எதிர்ப்பு தெரிவித்த தால், சலசலப்பு எழுந்தது.
பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். கூட்டணி ஆட்சி நடக்கும் இம்மாநில கல்வித் துறை அமைச்சராக, காங்கிரசைச் சேர்ந்த, அசோக் சவுத்ரி உள்ளார்.
புதிய கொள்கை
அவர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஸ்மிருதி இரானிக்கு, டுவிட்டர் சமூக வலைதளத்தில் எழுதிய ஒரு பதிவில், 'டியர் ஸ்மிருதி இரானி, பீஹார் மாநிலத்திற்கு, புதிய கல்விக் கொள்கை எப்போது கிடைக்கும்; உங்கள் காலண்டரில், 2015ம் ஆண்டு எப்போது முடியும்? என, குறிப்பிட்டு இருந்தார்.
தன்னை, 'டியர்' என குறிப்பிட்டு, அசோக் சவுத்ரி எழுதியது பிடிக்காததால், அதற்கு ஸ்மிருதி இரானி எதிர்ப்பு தெரிவித்து, டுவிட்டரில் பதிவு வெளியிட்டார்.
வார்த்தைப் போர்
அதற்கு, டுவிட்டரில் பதில ளித்த அசோக் சவுத்ரி, 'உங்களை அவமதிப்பதற்காக, டியர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை; தொழில்
நிபுணத்துவத்துடன் எழுதப்படும் இ - மெயில்களில், டியர் என்ற வார்த்தையுடன் தான் ஆரம்பிக்கப்படுகிறது' என, தெரிவித்து உள்ளார். டுவிட்டரில், ஸ்மிருதி இரானி - அசோக் சவுத்ரி இடையே நடந்த வார்த்தைப் போர், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (33)

Marshal Thampi - Nagercoil,இந்தியா
15-ஜூன்-201619:16:43 IST Report Abuse
Marshal Thampi வெங்காயம்
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஜூன்-201616:59:02 IST Report Abuse
இந்தியன் kumar எந்த அர்த்தத்தில் எழுதினார் என்பது அசோக் சௌத்ரி அவர்களுக்கே வெளிச்சம்.
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
15-ஜூன்-201616:58:34 IST Report Abuse
K.Sugavanam ட்விட்டர்,ஃபேச்புக் எல்லாம் அரசு அதிகார பூர்வ தளங்கள் அல்ல.. அவை சமூக வலை தளங்கள்..அங்கு இவரை மாநீய, மதிப்பிற்குரிய என அழைக்க தேவை இல்லை. எனவே dear பிடிக்கலின்னா அன்புள்ள அப்பிடீன்னு விளிக்கலாம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X