அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நான்கு மேயர், 25 சதவீத பங்கீடு
தி.மு.க.,விடம் கேட்கிறது காங்.,

உள்ளாட்சி தேர்தலில், நான்கு மேயர் உட்பட, 25 சதவீத இடங்களை, காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. இரண்டு மேயர் உட்பட, 15 சதவீத இடங்களை ஒதுக்கலாம் என, தி.மு.க., திட்டமிடுகிறது.

 நான்கு மேயர், 25 சதவீத பங்கீடு தி.மு.க.,விடம் கேட்கிறது காங்.,

சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரசுக்கு, ௪௧ தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அதில், எட்டு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 'வரும் உள்ளாட்சி தேர்தலிலும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடரும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தமிழக காங்.,

தலைவர் இளங்கோவன் ஆகியோர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், தி.மு.க.,வில் ஒரு தரப்பினர், 'உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும்' என்ற கருத்தைவலியுறுத்துகின்றனர். அதேபோல, காங்கிரசில் உள்ள தி.மு.க., எதிர்ப்பு கோஷ்டியினரும், தனித்து போட்டியிடுவதை ஆதரிக்கின்றனர்.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலில், அக்கட்சிக்கு, ௧௭ சதவீத இடங்கள் வழங்க வேண்டும்.

ஆனால், காங்கிரஸ் எட்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள தால், அதனடிப்படையில், உள்ளாட்சி தேர்தலில் இடங்களை ஒதுக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது.

ஆனால், காங்கிரஸ் தலைமை, 25 சதவீதம் இடங்களை பெற திட்டமிட்டுள்ளது. மொத்தமுள்ள, 12 மாநகராட்சி மேயர் பதவிகளில், நான்கு

Advertisement

வேண்டும் என, காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், தி.மு.க., தரப்பில், இரண்டு மேயர் பதவியை விட்டு கொடுக்கலாம். மொத்த உள்ளாட்சி பதவி இடங்களில், 15 சதவீதம் வரை ஒதுக்கலாம் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

விரைவில், உள்ளாட்சி தேர்தல் பங்கீடு தொடர் பாக, இரு கட்சிகளின் சார்பில் குழு அமைத்த பின், அதிகாரபூர்வ பேச்சு துவங்கும் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
15-ஜூன்-201620:13:21 IST Report Abuse

Panneerselvam Chinnasamyசென்னை மாநகராட்சியை பொறுத்தவரை அன்றாடகாச்சியாய் இருந்த அ தி மு க கவுன்சிலர் எல்லாம் இப்போ அட்டகாசகோடீஸ்வரர்கள் ஆகி விட்டார்கள். எதிலும் லஞ்ச லாவண்யம்.பூந்து விளையாடுகிறது. எனவே தி மு க தனித்து நின்றாலே ஜெயித்துவிடும். இருந்தாலும்,தி மு க கூட்டணி தர்மத்தை கடை பிடித்து முன்னே பின்னே காங்கிரஸ் கட்சிக்கு இடம் ஒதுக்கலாம்.

Rate this:
Renga Naayagi - Delhi,இந்தியா
16-ஜூன்-201605:48:06 IST Report Abuse

Renga Naayagiதிமுகவினர் அப்படியே அரிச்சந்திரன் பரம்பரை .. ...

Rate this:
Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா
15-ஜூன்-201619:56:06 IST Report Abuse

Chidambaranathan Ramaiahஇ வி கே எஸ் தம்பி கேளு தம்பி கேளு யார்கிட்ட கேக்குற தாத்தா கிட்ட தான கேக்குற? 18 மேயர் 194 நகராட்சி வேணுமுன்னு கேளு

Rate this:
Arivazhagan Nambi - Doha,கத்தார்
15-ஜூன்-201619:11:58 IST Report Abuse

Arivazhagan Nambiதி.மு.க., 'உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும்'

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X