அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மா.செ.,க்கள் மீது கடும் கோபம் :
விஜயகாந்த் விசாரணை ஆரம்பம்

தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, 14 மாவட்ட செயலர்களை சென்னைக்கு அழைத்து, அக்கட்சி தலைவர் விஜயகாந்த், இன்று விசாரணை நடத்தவுள்ளார்.

 மா.செ.,க்கள் மீது கடும் கோபம் :விஜயகாந்த் விசாரணை ஆரம்பம்

தே.மு.தி.க., தலைமையை விமர்சித்தும், அக்கட்சி தலைவர் விஜயகாந்தின் சொத்துகள் மற்றும் அறக்கட்டளை விவகாரங்கள் குறித்தும், சமூக வலைதளங்களில், ஒன்பது பக்க கடிதம் வெளியானது.இக்கட்சியைச் சேர்ந்த, 14 மாவட்ட செயலர்கள்,

இந்த கடிதத்தை எழுதியதாக, தகவல் பரவியது. இது, அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, 14 மாவட்ட செயலர்களையும் அழைத்து, இன்று விஜயகாந்த் விசாரணை நடத்த உள்ளார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்டமாவட்டங்களைச் சேர்ந்த, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று, சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இதில் பங்கேற்றவர்களும், கட்சி நிதி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். இவர்களை, மாவட்ட செயலர்கள் துாண்டி விட்டு, கேள்வி கேட்க வைத்துள்ளதாக, விஜயகாந்துக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலர்களை, விஜயகாந்த் மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்; பலர், அழைப்பை ஏற்கவில்லை.போனை எடுத்தவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். அவர்களும், சரியான பதில் அளிக்கவில்லை. எனவே, இந்த மாவட்ட செயலர்களையும், இன்று கட்சி தலைமை அலுவலகத்திற்கு வரும்படி, விஜயகாந்த்

Advertisement

அழைத்துள்ளார்.இதற்கிடையே, மாவட்ட செயலர்கள் சிலர், அந்த கடிதம் குறித்து, விஜயகாந்திடம், நேற்று தன்னிலை விளக்கம் அளித்தனர். மற்ற மாவட்ட செயலர்களிடம், இன்று விசாரணை நடத்திய பின், அந்த கடிதத்தை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, விஜயகாந்த் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
- நமது நிருபர்- -

Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
28-ஜூன்-201619:53:58 IST Report Abuse

Balajiவனவாசத்திலிருந்து தேமுதிக மீளுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது...... எப்படி இவர் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க போகிறாரோ தெரியவில்லை..

Rate this:
Natarajan Krishnaier - Bhopal,இந்தியா
28-ஜூன்-201618:13:42 IST Report Abuse

Natarajan Krishnaierதினமலர் ஆசிரியர் அவர்களே , தினமும் ஒரு கேப்டன் நியூஸ் போடுங்கள். படு ஜாலியாக உள்ளது . வாசகர்களின் கமெண்டுகளும் ஜாலி. வெறும் அரசியல் நியூஸ் போரடிக்கிறது .

Rate this:
Diwakar - Chennai,இந்தியா
28-ஜூன்-201619:49:30 IST Report Abuse

Diwakarபொதுவா விஜயகாந்துக்கு வோட்டு போடாதவங்க ..அவரை முதல்வர் பதவிக்கு தகுதியானவர் அல்ல ஆனால் அவர் நல்லவர் என்கிற எண்ணம் பலருக்கு உண்டு .. திமுகவும் அல்லது மக்கள் தேமுதிக வோ தொடர்ந்து தேமுதிகவை உடைக்க நினைக்கிறது.. ..விஜயகாந்த் நல்லவர் என்று நினைப்பவர்கள் அதிமுக போக வாய்ப்பு இருக்கு... ...

Rate this:
$$$$ - $$$$,இந்தியா
28-ஜூன்-201618:07:43 IST Report Abuse

$$$$யாருமே இல்லாத கடையில இப்படி தன்னந்தனியா டீ ஆத்துறியேப்பா...ஒன்னோட கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே கிடையாதா?

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X