பதிவு செய்த நாள் :
தியேட்டர்கள், உணவகங்கள், வங்கிகள் 24 மணி நேரம் அனுமதி

புதுடில்லி:கடைகள், தியேட்டர்கள், வங்கிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை, 24 மணி நேரமும் இயங்கும் வகையிலான, புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை, நேற்று அனுமதி அளித்தது.

தியேட்டர்கள், உணவகங்கள், வங்கிகள் 24 மணி நேரம் அனுமதி

தற்போது, மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சில சேவைத் துறை நிறுவனங்கள் மட்டுமே, 24 மணி நேரமும் செயல்படுகின்றன. இந்நிலையில், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், சில முக்கிய முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டன.இதன்படி, கடைகள், தியேட்டர்கள், வங்கிகள், ஓட்டல்கள் உள்ளிட்டவையும், 24 மணி நேரமும் இயங்கும் வகையிலான,மாதிரி சட்ட மசோதாவுக்கு, அமைச்சரவை அனுமதி அளித்தது. இது குறித்து, மத்திய தொழிலாளர் நல அமைச்சக செயலர் சங்கர் அகர்வால் கூறியதாவது:
இந்த சட்டத்திற்கு,பார்லிமென்டின் ஒப்புதல் தேவையில்லை. அனைத்து மாநில அரசுகளுக்கும், இந்த மாதிரி சட்டம் தொடர்பான ஆலோசனை கடிதம் அனுப்பி வைக்கப்படும். சட்டத்தை அப்படியே அமல்படுத்துவதும், மாற்றங்கள் செய்வதும், மாநில அரசுகளின் விருப்பத்தை பொறுத்தது.
அதே நேரத்தில், ஊழியர்களின் உரிமையை, இந்த சட்டம் பாதுகாக்கும்; இது நடைமுறைக்கு வந்தால், சேவைகள் துறையின் வருவாய் பெருகும். தயாரிப்பு துறை தவிர்த்து, இதர துறைகளை, இந்த மாதிரி சட்டம் கட்டுப்படுத்தும்; இது, அரசு அலுவலகங்கள் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு பொருந்தாது.

Advertisement

குறைந்தபட்சம்,10 ஊழியர்கள் அடங்கிய நிறுவனங்களை, மாதிரி சட்டம் கட்டுப்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய அம்சங்கள்

* கடைகள், வங்கிகள், தியேட்டர்கள், ஓட்டல்கள், நிதிச் சேவைகள், பொழுதுபோக்கு மையங்கள், 24 மணி நேரம் இயங்கலாம்
* இரவில் பெண்கள் பணிபுரிய அனுமதி உண்டு. ஆனால், அவர்களுக்கு போக்குவரத்து வசதி, குழந்தை பாதுகாப்பு பிரிவு மற்றும் கழிப்பறை வசதிகளை, நிறுவனங்கள் செய்து தர வேண்டும்
* தொழிற்சாலை ஆய்வாளர்களுக்கு பதிலாக, அனுசரணையாளர்கள் நியமிக்கப்பட்டு, நிறுவனர்கள் - ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்குவர்; கடைகளை ஆய்வு செய்வர்
* கிடங்குகள், 'பேக்கேஜ்' செய்யும் மையங்கள், 24 மணி நேரமும் இயங்க, முதன் முதலாக மாதிரி சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், மின்வணிக நிறுவனங்கள் பயன்பெறும்.


Advertisement

வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SINGA RAJA - MADURAI,இந்தியா
30-ஜூன்-201619:38:19 IST Report Abuse

SINGA RAJAமிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்பினை உருவாக்கி, சாமான்ய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும், அனைத்து மக்களின் வாங்குதிறனை உயர்த்தும், அரசின் வருவாயையும் பெருக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ள மிக அருமையான சட்டம்.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
30-ஜூன்-201618:03:28 IST Report Abuse

K.Sugavanamஇந்தியா இந்திரலோகம் ஆயிடப் போவுது..ஜாக்கிரதை..ஆடி தள்ளுபடிக்கி அடிச்சிக்க வேணாம்..அட்சய த்ருதியைக்கு கியூல நிக்க வேணாம் சாவகாசமா போயி ஒரு 48 மணி நேரம் அங்கேயே இருந்து நிதானமா செலக்ட் பண்ணலாம்.. ..

Rate this:
Prakash - tamilnadu,இந்தியா
30-ஜூன்-201617:17:57 IST Report Abuse

Prakashயோசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இப்பொழுது இருக்கின்ற நிலைக்கே யாருக்கும் பாதுகாப்பு இல்லை முக்கியமாக பெண்களுக்கு.......... இதில் 24 மணி நேரமும் செயல்படும் என்றால் பாதுகாப்பு??????????????????

Rate this:
மேலும் 50 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X